தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

நீர் தாங்கிக்குள் பிரபாகரன் இருந்தார்: சிங்களவர்களுக்கு கதை விடும் இராணுவம் ! 01 June, 2014 by admin



கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக ஏ௯ வீதியோரம் இருந்த பெரிய நீர்தாங்கி போர்காலத்தில் பெரிதும் நீர்விநியோகத்திற்கு பயன்பட்டுவந்தது. 2009 போரின் போது குண்டுவவைத்து தகர்க்கப்பட்டு வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை சுற்றி மதில் கட்டிய இலங்கை இராணுவம் அந்த நீர்தாங்கியை தென்னிலங்கையில் இருந்துவரும் மக்களை ஏமாற்றுவதற்கும் தமது வீரப்பிரதாபங்களை சொல்லவும் இந்த உடைந்து வீழ்ந்த நீர்த்தாங்கியை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். இந்த நீர்தாங்கிக்குள்தான் பிரபாகரன் இருந்ததாக சிங்கள மக்களுக்கு சிப்பாய்கள் சொல்ல அதை வேத மென நம்பி அவர்களும் பூரித்துப்போயினர். அழகான கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரியுள்ளார்.

கிளிநொச்சிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நீர்த்தாங்கிக்காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதன் காரணமாக அங்கு அமைக்கப்படவேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக்காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது. அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இப்படியான கூட்டங்களில் , சில முடிவுகளை எடுத்து வருகிறோம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கை இராணுவம் அனுமதிப்பது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6906

Geen opmerkingen:

Een reactie posten