இவர்களை இராணுவத் தலைமையகம், மிகவும் சாதூரியமாகவே தேர்ந்து எடுத்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தினரையே இவ்வாறு தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது நடந்த கழியாட்ட விழாவில் பல இராணுவத்தினர் மதுபோதையில் மிதந்துள்ளார்கள். பின்னர் இரவு இவர்கள் புறப்பட்டு தத்தமது இடங்களுக்குச் செல்ல, ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்கள். இவ்வாறு ஆட்டோவில் சென்ற இராணுவத்தினர், இனி தாம் தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்தில் மணம் முடிக்கலாம் என்றும், தமக்கு நன்றாக தமிழ் தெரியும் எனவும் ஆட்டோ சாரதியிடம் பேசியுள்ளார்கள்.
பெரும்பாலும் தென்னிலங்கையை விட தாம் யாழ்ப்பாணத்தில் வசிக்கவே பெரிதும் விரும்புவதாகவும், இங்கே தாம் குடியேற விரும்பினால் இலங்கை இராணுவத்தால் தமக்கு இலவச காணிகள் கிடைக்கும் என்றும் அவர்கள் பேசியுள்ளார்கள் என ஆட்டோ சாரதிகள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/251.html
Geen opmerkingen:
Een reactie posten