[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:30.57 AM GMT ]
இந்தச் சம்பவம் இன்று காலை 7.45 அளவில் களனி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.
இதனால் தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள், அலுவலகம் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிலைமையை சீர்செய்ய மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKair6.html
திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது: ஐ.தே.க பொதுச்செயலாளர்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:37.07 AM GMT ]
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை தயாரித்து அதனை இரகசிய உடன்படிக்கை என கூறுவதாக கபீர் ஹசிம் கூறினார்.
அரசாங்கம் போலியான ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும் அதில் உள்ள கையெழுத்தும் போலியானதெனவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszCRXKair7.html
பௌத்த வாத அமைப்புக்களை சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விடுகின்றமையே வெளியேறக் காரணம்! ரிஷாத்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:55.21 AM GMT ]
அமைச்சர் ரிஷாத் பதியுதின் அரசில் இருந்து வெளியேறியமைக்கான காரணத்தை, பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் பலமும் வெற்றியும் கடந்த காலங்களில் எம்மிலும் தங்கியிருந்தது. 2005ம் ஆண்டு தொடக்கம் நேற்று வரை நாம் அரசாங்கத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துள்ளோம்.
நாட்டில் முப்பது வருடகால யுத்தம் ஒன்று இடம்பெற்றிருந்த போது விடுதலைப் புலிகளை அழித்து வடக்கு, கிழக்கில் அமைதியான சூழ்நிலைலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து நாம் போராடி வந்துள்ளோம்.
2009ம் ஆண்டு யுத்தத்தினை வெற்றி கொண்ட போது அதன் பங்குதாரராக நாமும் இருந்துள்ளோம். யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அபிவிருத்திகள், இராணுவம் செய்த சேவைகள் என அனைத்துக்கும் நாம் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
எனினும், இறுதியான இரண்டு ஆண்டு காலங்களில் நாட்டில் நிலைமை மிக மோசமானதாக மாறிவிட்டது. அரசாங்கம் தனது சுயநலத்திற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது.
இனவாத, மதவாத செயற்பாடுகளை அதிகளவில் பரப்பி விட்டு அதில் சுயநல அரசியலைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பௌத்த இனவாத அமைப்பின் பொதுபல சேனா அமைப்பினை வளரவிட்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
பொதுபல சேனா பௌத்த அமைப்பு தொடர்பில் நாம் பல தடவைகள் ஜனாதிபதியிடமும் பாதுகாப்பு செயலாளரிடமும் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இப் பிரச்சினைகளை கவனத்திற் கொள்ளவில்லை. அரசாங்கம் இன்று இனவாதத்தினை முழு நாட்டிற்கும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றது.
அதற்கு முன்னர் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக அமைந்து விட்டது.
எனவே இப்போது நாம் மக்களை காப்பாற்றும் முடிவினையே எடுக்க வேண்டும். பதவியும் பணமும் மக்களைக் காப்பாற்றாது.
எனவே இப்போது நாங்கள் எடுத்துள்ள தீர்மானம் கட்சியில் அனைவராலும் இணைந்து ஆலோசிக்கப்பட்டு நிதானமாக முடிவெடுக்கப்பட்டது.
நாட்டில் அமைதியினையும் நல்லாட்சியினையும் ஏற்படுத்த இது நல்லதொரு சந்தர்ப்பம்.
எனவே இதனை அடிப்படையாகக் கொண்டே நாம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் நிரந்தர நல்லாட்சியை ஏற்படுத்த தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். எனவே அதற்காக பொது எதிரணியுடன் கைகோர்த்து வெற்றியினை உறுதிப்படுத்த முயற்சிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaisz.html
அமைச்சர் ரிஷாத் எடுத்த முடிவு முட்டாள்தனமானது: ஹிஸ்புல்லா சாடல்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 06:12.57 AM GMT ]
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்தை, நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்போம் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முடிவு தெடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடியிலுள்ள ஜனாதிபதியின் பிரசார அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை நாம் முன் வைத்தோம்.
அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமைச்சர் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படல் வேண்டுமென்பது. அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எந்த வித பேச்சுவார்த்தைகளோ இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு கட்சியின் பிரதி தலைவர் சட்டத்தரணி சஹீத் அல்லது கட்சியில் இருக்கின்ற பிரதியமைச்சரான நானோ அழைக்கப்படவுமில்லை. பேச்சுவார்த்தை நடாத்தப்படவுமில்லை.
அவ்வறான நிலையில் எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகளுமில்லாமல், அமைச்சர் ரிஷாத், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது எனும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
ஆகவே, கட்சியின் உறுப்பினர்களை நான் அழைத்து, இது தொடர்பில் கலந்துரையாடிய போது, கலந்து கொண்ட அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
இந்த தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலேயே நாங்கள் இப்போதும் இருக்கின்றோம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம்.
அமைச்சர் ரிஷாத், தான் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்பதை தேர்தலின் பின்னர், இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவே வெல்வார் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais0.html
Geen opmerkingen:
Een reactie posten