தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

அமைச்சர் ரிஷாத் எடுத்த முடிவு முட்டாள்தனமானது: ஹிஸ்புல்லா சாடல்,பௌத்த வாத அமைப்புக்களை சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விடுகின்றமையே வெளியேறக் காரணம்! ரிஷாத்

ரயில் என்ஜினுடன் பெட்டி கழன்று சென்றதால் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:30.57 AM GMT ]
பொல்காஹவெலயில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் என்ஜினுடன் பெட்டியொன்று தனியாக கழன்று சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம்  இன்று காலை 7.45 அளவில் களனி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.
இதனால் தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள், அலுவலகம் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிலைமையை சீர்செய்ய மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKair6.html
திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது: ஐ.தே.க பொதுச்செயலாளர்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:37.07 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை தயாரித்து அதனை இரகசிய உடன்படிக்கை என கூறுவதாக கபீர் ஹசிம் கூறினார்.
அரசாங்கம் போலியான ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும் அதில் உள்ள கையெழுத்தும் போலியானதெனவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszCRXKair7.html
பௌத்த வாத அமைப்புக்களை சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விடுகின்றமையே வெளியேறக் காரணம்! ரிஷாத்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:55.21 AM GMT ]
அர­சாங்­க­மா­னது பௌத்த மத­வாத அமைப்­புக்­களை பாது­காத்து சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக தூண்டி விடும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­கின்­றது. இதுவே நாம் அரசில் இருந்து வெளி­யேறக் காரணம் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதி­யுதின் அரசில் இருந்து வெளி­யே­றி­ய­மைக்­கான கார­ணத்தை,   பொது எதி­ர­ணியின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அர­சாங்­கத்தின் பலமும் வெற்­றியும் கடந்த காலங்­களில் எம்­மிலும் தங்­கி­யி­ருந்­தது. 2005ம் ஆண்டு தொடக்கம் நேற்று வரை நாம் அர­சாங்­கத்­துக்கு உண்­மை­யா­கவும் நேர்­மை­யா­கவும் நடந்­துள்ளோம்.
நாட்டில் முப்­பது வரு­ட­கால யுத்தம் ஒன்று இடம்­பெற்­றி­ருந்த போது விடு­தலைப் புலி­களை அழித்து வடக்கு, கிழக்கில் அமை­தி­யான சூழ்­நி­லைலை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்­கத்­துடன் இணைந்து நாம் போராடி வந்­துள்ளோம்.
2009ம் ஆண்டு யுத்­தத்­தினை வெற்றி கொண்ட போது அதன் பங்­கு­தா­ர­ராக நாமும் இருந்­துள்ளோம். யுத்­தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்ற அபி­வி­ருத்­திகள், இரா­ணுவம் செய்த சேவைகள் என அனைத்­துக்கும் நாம் எமது நன்­றி­களை தெரி­விக்­கின்றோம்.
எனினும், இறு­தி­யான இரண்டு ஆண்டு காலங்­களில் நாட்டில் நிலைமை மிக மோச­மா­ன­தாக மாறி­விட்­டது. அர­சாங்கம் தனது சுய­ந­லத்­திற்­காக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான காட்­டு­மி­ராண்டித் தன­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்ள ஆரம்­பித்து விட்­டது.
இன­வாத, மத­வாத செயற்­பா­டு­களை அதி­க­ளவில் பரப்பி விட்டு அதில் சுய­நல அர­சி­யலைச் செய்ய ஆரம்­பித்து விட்­டனர். பௌத்த இன­வாத அமைப்பின் பொது­பல சேனா அமைப்­பினை வள­ர­விட்டு நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­றனர்.
பொது­பல சேனா பௌத்த அமைப்பு தொடர்பில் நாம் பல தட­வைகள் ஜனா­தி­ப­தி­யி­டமும் பாது­காப்பு செய­லா­ள­ரி­டமும் தெரி­வித்­தி­ருந்த போதிலும் அவர்கள் இப் பிரச்­சி­னை­களை கவ­னத்திற் கொள்­ள­வில்லை.  அர­சாங்கம் இன்று இன­வா­தத்­தினை முழு நாட்­டிற்கும் கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றது.
அதற்கு முன்னர் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும். இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாது­காப்­பான ஒன்­றாக அமைந்து விட்­டது.
எனவே இப்­போது நாம் மக்­களை காப்­பாற்றும் முடி­வி­னையே எடுக்க வேண்டும். பத­வியும் பணமும் மக்­களைக் காப்­பாற்­றாது.
எனவே இப்­போது நாங்கள் எடுத்­துள்ள தீர்­மானம் கட்­சியில் அனை­வ­ராலும் இணைந்து ஆலோ­சிக்­கப்­பட்டு நிதா­ன­மாக முடி­வெ­டுக்­கப்­பட்­டது.
நாட்டில் அமை­தி­யி­னையும் நல்­லாட்­சி­யி­னையும் ஏற்­ப­டுத்த இது நல்­ல­தொரு சந்­தர்ப்பம்.
எனவே இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் நிரந்தர நல்லாட்சியை ஏற்படுத்த தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். எனவே அதற்காக பொது எதிரணியுடன் கைகோர்த்து வெற்றியினை உறுதிப்படுத்த முயற்சிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaisz.html
அமைச்சர் ரிஷாத் எடுத்த முடிவு முட்டாள்தனமானது: ஹிஸ்புல்லா சாடல்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 06:12.57 AM GMT ]
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்தை, நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்தை, நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்போம் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முடிவு தெடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடியிலுள்ள ஜனாதிபதியின் பிரசார அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை நாம் முன் வைத்தோம்.
அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமைச்சர் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படல் வேண்டுமென்பது. அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எந்த வித பேச்சுவார்த்தைகளோ இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு கட்சியின் பிரதி தலைவர் சட்டத்தரணி சஹீத் அல்லது கட்சியில் இருக்கின்ற பிரதியமைச்சரான நானோ அழைக்கப்படவுமில்லை. பேச்சுவார்த்தை நடாத்தப்படவுமில்லை.
அவ்வறான நிலையில் எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகளுமில்லாமல், அமைச்சர் ரிஷாத், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது எனும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
ஆகவே, கட்சியின் உறுப்பினர்களை நான் அழைத்து, இது தொடர்பில் கலந்துரையாடிய போது, கலந்து கொண்ட அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
இந்த தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலேயே நாங்கள் இப்போதும் இருக்கின்றோம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம்.
அமைச்சர் ரிஷாத், தான் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்பதை தேர்தலின் பின்னர், இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவே வெல்வார் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais0.html

Geen opmerkingen:

Een reactie posten