மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- மண்சரிவு அபாயம்: 60 குடும்பங்கள் இடம்பெயர்வு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 04:34.25 AM GMT ]
மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
மண்சரிவு அபாயம்: 60 குடும்பங்கள் இடம்பெயர்வு
மண்சரிவு காரணமாக நுவரெலியா இராகலை தியனில்ல பகுதியில் உள்ள 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கன மழை காரணமாக தியனில்ல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் அம்மக்களை தோட்ட கோவில்களில் தங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
இந்த பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு நிலம் வெடித்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்ததோடு அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க தீர்மானம் எடுத்த போதும் அந்த தீர்மானம் இன்று வரை நடைபெறாததால் மக்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு, மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKair4.html
கிழக்கில் தொடரும் அடைமழையால் நீரில் மூழ்கும் பல கிராமங்கள்! பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 05:03.47 AM GMT ]
கொட்டும் மழையிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு நேற்று நேரடியாக சென்று அவர்களது குறைகளை கேட்றிந்ததோடு அவர்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடனும், சகல பிரதேச செயலாளருடனும் தொடர்பு கொண்டு மக்களுக்கான தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர் நிறைவேற்றினார்.
மட்டக்களப்பில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட இடங்களில் ஆறு இடங்களில் மக்களை தங்கவைத்துள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.
இதேபோன்று பட்டிப்பளை பிரதேச பிரிவிலும் மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கா உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது இதற்கான அனைத்து வேலைகளையும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார்.
முன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளுக்குள் நீர் உட்புகுந்த அனைத்து மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களுக்கான அனைத்து உடனடிதேவைகளும் பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
இவைதவிர வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் சென்று பார்வையிட்டு வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மூன்று நாட்களாக பெய்து வருகின்ற மழையினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தாழ்வான பல கிராமங்கள் மழை நீரினால் மூள்கியுள்ளன.
குறிப்பாக மண்டூர், வேத்துச்சேனை, தம்பலவத்தை, மருங்கையடிப்பூவல், சங்கர்புரம் கணேசபுரம், வெல்லாவெளி, போன்ற கிராமங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
தொடச்சியாக பெய்த மழையினால் மருங்கையடிப்பூவல் கிராமத்தில் உள்ள தாழ்வான பல வீடுகள் நீரில் மூள்கியுள்ளன. வீதியால் பெருக்கேடுத்த வெள்ள நீர் கட்டுக்கடங்காது வீதிகளை உடைத்து பல வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளன. இது தொடர்பாக பிரதேசவாசிகள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் நிலையம் கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோருக் அறிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்கு பிரதேச செயலகத்திலிருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருகைதந்திருந்தனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவுகள் சமைக்கப்பட்டு பாலர் பாடசாலையில் வைத்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
மண்டூரில் இருந்து வெல்லாவெளியினுடாக செல்லும் பிரதான கோசுகையினுடாக வெள்ள நீர் பெருக்கேடுத்து செல்வதால் மக்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்தோடு மண்டூரில் இருந்து தம்பலவத்தையீனூடக செல்லும் பாலத்தடி மதகுகினூடகவும் நீர் பாய்ந்து செல்வதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மக்களினன் நலன் கருதி இரு இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு மண்டூர் குருமன்வெளி ஊடான படகுச் சேவையும் அதிக காற்று மழையினால் தாமதமாகவே நடைபெறுகின்றது. இதனால் மக்களின் போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையினால் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் வீட்டுத்தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல வீதிகளில் போக்குவத்து செய்ய முடியாத நிலையில் வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளது. தொடந்து மழை பெய்யுமானால் பல கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலமை ஏற்படும்.
மற்றும், மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 30 கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலங்களுக்கு மேலாக பெய்து கொண்டிருக்கும் தொடர் மழை காரணமாகவும் உறுகாமக் குளம் பெருக்கெடுத்துள்ளதால் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் சுமார் 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மட்டக்களப்பு திருகோணமலை வீதி, ஈரளக்குளம் வீதி, வேப்பவெட்டுவான் வீதி, மயிலவெட்டுவான் வீதி போன்றவற்றின் ஊடான போக்குவரத்துக்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடைசியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களின் படி சுமார் 30 கிராமங்களில் உள்ள 12542 குடும்பங்களைச் சேர்ந்த 45277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான பராமரிப்பு பணிகளை செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழையினால் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேச கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட யோகேஸ்வரன் எம்.பி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தியாவில் இருந்து வருகை தந்து வாகரைப் பிரதேசத்தில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை திங்கட்கிழமை பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்.
அந்தவகையில் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 212 குடும்பத்தை சேர்ந்த 750 பேரும், புச்சாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்தில் 90 குடும்பத்தை சேர்ந்த 267 பேரும், தோணிதாட்டமடுவில் 35 குடும்பத்தை சேர்ந்த 126 பேரும், ஆண்டான்குளத்தில் 70 குடும்பத்தை சேர்ந்த 246 பேரும், கட்டுமுறிவுக்குளத்தில் 143 குடும்பத்தை சேர்ந்த 576 பேரும், பால்ச்சேனை அ.க.பாடசாலையில் 483 குடும்பத்தை சேர்ந்த 1615 பேரும், அம்பந்தனாவெளி வம்மிவட்டவான் பாடசாலையில் 565 குடும்பத்தை சேர்ந்த 1869 பேரும், வாகரை வடக்கு கண்டலடி பாடசாலையில் 105 குடும்பத்தை சேர்ந்த 410 பேரும் தங்கியுள்ளனர்.
அத்தோடு வட்டவான், இடைத்தங்கல் முகாம், இறாலோடை இடைத்தங்கல் முகாம், காயான்கேணி இடைத்தங்கல் முகாம், மாவடியோடை கிறிஸ்தவ தேவாலய இடைத்தங்கல் முகாம் என்பன மேலதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களாகும். வாகரைப் பிரதேசத்தில் மாத்திரம் மேற்தரப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKair5.html
Geen opmerkingen:
Een reactie posten