[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:49.37 PM GMT ]
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை உரியமுறையில் தீர்த்துத் தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தமையை அடுத்து, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் மேலும் காலஅவகாசத்தை பெற்றுள்ளார்.
ஜனாதிபதியும் ஹக்கீமும் நேற்று மாலை சந்தித்தனர்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது முஸ்லிம் சமூகம் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளநிலையில் தமது கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இதனையடுத்து 2012ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளான தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக தீர்த்து வைக்க ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதன்போது தமது தீர்மானத்தை மேற்கொள்ள மேலும் காலஅவகாசம் தேவை என்று ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறாதுபோனால் கட்சிக்குள் பிளவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று கட்சித் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu0.html
மஹிந்தவையும் மைத்திரியையும் சட்டத்தரணிகள் சங்கம் விவாதத்துக்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 02:56.56 PM GMT ]
ஐந்து அம்சங்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும மைத்திரிபால சிறிசேனவையும் பொதுவிவாதத்துக்கு அழைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விவாதம், சுயாதீன குழு ஒன்றின் முன்னிலையில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம், சட்டம், ஒழுங்கு, நல்லாட்சி, ஊழல்களை ஒழித்தல் என்ற ஐந்து அம்சங்களுக்கு கீழ் இந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விவாதத்தை ஜனவரி 2 அல்லது 5ஆம் திகதியன்று நடத்துவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை இரண்டு வேட்பாளர்களும் தமது பதிலை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu1.html
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு உதவி
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 03:06.01 PM GMT ]
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக வன்னியில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன. அத்துடன் வாய்க்கால்கள் மற்றும் சிறிய குளங்கள் குட்டைகள் நீரால் நிரம்பி வழிகின்றன.
கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் அநேக கிராமங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மேற்கில் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஸ்கந்தபுரம் புதிய குடியிருப்பு கண்ணகிபுரம் முட்கொம்பன் ஆனைவிழுந்தான் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாகவும் வீடுகள் ஊற்றுப்பிடித்துள்ளதன் காரணமாகவும் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று இவ்வாறு பள்ளிகளில் தங்கியுள்ள மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளது.
இந்தப் பொதிகளை மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தயாபரன், அன்ரன்டானியல், அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச தமிழரசுகட்சியின் தலைவர் சிறி, செயலாளர் கதிர்மகன், இளைஞர் அணி செயலாளர் கு.சர்வானந்தா உட்பட கட்சி நிர்வாகிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu2.html
தமக்கு பிரதமர் பதவியை தர உறுதியளிக்கப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 03:34.56 PM GMT ]
எனினும் அதனை தாம் நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம், ஜனவரி 8ம் திகதியன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவலை அடுத்து இன்று சரத் பொன்சேகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் என்ற செய்தியை அவர் மறுத்துள்ளார்.
ஊழல் மிக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் தொடர்ந்தும் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தோல்வியி;ன் பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் இராணுவ தரங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu3.html
Geen opmerkingen:
Een reactie posten