தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

25ல் 17 மாவட்டங்களை எதிரணி வெற்றி கொள்ளும் அலை இப்போதே வீசுகிறது!- மனோ கணேசன்

பதற்ற நிலையால் வாக்கு பதிவு நிறுத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 06:53.37 AM GMT ]
கொழும்பு நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால் மூல வாக்கு பதிவு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு ஆதரவான குழு அந்த வாக்கு பதிவு நிலையத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தியதே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு ஊழியர்கள் பலவந்தப்படுத்தப்பட்டதால் இந்த நிலை தோன்றியுள்ளது.
முடிவாக இந்த வாக்கு பதிவை ரத்து செய்ய தேர்தல் அதிகாரி தீர்மானித்துள்ளார்.
தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 41 ஆயிரத்து 831 வாக்காளர்கள் தகுதி
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
இம்முறை தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 41 ஆயிரத்து 831 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களும், தெரிவத்தாட்சி அதிகாரிகளும் வாக்களிப்பதற்காக வேறு விசேட தினமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தபால்மூல வாக்களிப்பின் கண்காணிப்பு பணிகளுக்காக ஆயிரம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், கல்வி அலுவலகங்கள், மற்றும் இராணுவ முகாம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais3.html
கசினோ மற்றும் பார் அனுமதிப் பத்திரங்களை நான் வழங்கவில்லை: மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 07:05.05 AM GMT ]
கசினோ மற்றும் பார் அனுமதிப்பத்திரம் ஒன்றையேனும் நான் வழங்கியதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனது ஆட்சிக் காலத்தில் பார் அனுமதிப்பத்திரம் ஒன்றையேனும் கசினோ அனுமதிப்பத்திரம் ஒன்றையேனும் நான் வழங்கியதில்லை.
இலங்கை தேர்தல் விஞ்ஞாபன வரலாறு ஒரு சில மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டதேயாகும். ஒரு சில மாதங்களில் இந்த ஆவணம் கிடப்பில் போடப்பட்டு விடும் நடைமுறையே காணப்படுகின்றது.
எனினும் இந்த வரலாற்றை நாம் மாற்றியமைத்துள்ளோம். மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம் மறக்கப்படும் ஓர் ஆவணமன்று.
இதனை முதல் தடவையாக வரலாற்றில் நாம் மாற்றியமைத்துள்ளோம். சொல்வதனை செய்யும் செய்வதனைச் சொல்லும் ஓர் தலைவனே நான்.
மின்சாரம் வீதி பாதைகள் பற்றி இன்று வாக்குறுதி அளிக்க முடியாது. கசினோ மற்றும் மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வழங்காத கைகளே என்னிடம் உள்ளது.
மதுபான மற்றும் புகையிலை உற்பத்தி தொடர்பிலான விளம்பரங்களை நிறுத்தினோம். பொது இடங்களில் மதுபானம் குடிப்பதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தடை விதக்கப்பட்டது எமது அரசாங்கமே.
வெளிநாட்டு சக்திகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்த மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais4.html
ஜே.வி.பி அமைப்பாளர் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 07:26.01 AM GMT ]
தெனியாய பிரதேச ஜே.வி.பி கட்சியின் அமைப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெனியா ஜே.வி.பி அமைப்பாளர் ஏ.டி.ஆரியதாச என்ற 57 வயதானவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த ஆரியதாச தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கை கால் மற்றும் பொல்லுகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais5.html


25ல் 17 மாவட்டங்களை எதிரணி வெற்றி கொள்ளும் அலை இப்போதே வீசுகிறது!- மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 06:33.52 AM GMT ]
கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலனறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய எட்டு மாவட்டங்களையும் வெற்றிகொள்ளும் கடுமையான பல்முனை பிரச்சாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
எதிரணியின் இந்த வெற்றிப்பாதைக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பெரும் பலம் சேர்த்து வருகிறது என தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இக்கூட்டங்களில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த நாட்டில் தமிழ். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் நமது வாக்குப்பலம் அரசை தோற்கடிக்கும். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களிலும், நமது வாக்குப்பலம், அரசை தோற்கடிக்க பெருந்துணையாக இருக்கும்.
இதை நான் செல்லும் இடங்களிலெல்லாம் சிங்கள மக்களுக்கு விளங்கும் விதத்தில் சிங்கள மொழியில் சொல்கிறேன். தமிழ், முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் எதிரணி வெல்ல முடியாது.
மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு காணி உரிமை பற்றி எதிரணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னமும் பல பிரச்சினைகள் இருந்தாலும் இந்த வீட்டுரிமை, காணியுரிமை பிரச்சினைகளே தோட்ட தொழிலாளர்களின் பிரதான பிரச்சினைகளாகும்.
எனவே இந்த அடிப்படையில் தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை நாம் எதிரணிக்கு வழங்கும்படி கோருகிறோம்.
தங்கள் மத சுதந்திரத்துக்கு விழுந்த அடி, முஸ்லிம் மக்களின் இன்றைய பிரதான பிரச்சினையாகும். இதன் காரணமாக இந்த ஆட்சியை அகற்றுவதில் முஸ்லிம் சகோதரர்கள் முன்னிலை வகிக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகள், தங்கள் வாக்காளர்களின் அபிப்பிராயத்தை கணக்கில் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொது எதிரணி மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரண்டு தரப்பினரின் தேர்தல் அறிக்கையையும் பரிசீலனையில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
இது தொடர்பில் எதிரணியில் உள்ளே இருக்கும் எமது கட்சியுடன் கருத்து பறிமாற்றங்களை கூட்டமைப்பு தலைவரும், தலைமை பொறுப்பில் இருக்கும் ஏனைய முக்கியஸ்தர்களும் நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவை கூட்டமைப்பு தலைவர், நாடு திரும்பிய பிறகு அறிவிப்பார் எனவும் நான் நம்புகிறேன்.
இந்த தேர்தலின் பின்னர் உருவாகக்கூடிய ஆட்சி ஒரு இடைக்கால ஆட்சியாகவே இருக்கும். இந்த ஆட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை தரும் மக்கள் ஆணையை கொண்டிருக்காது. நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு மாற்றிய பிறகு, ஒரு தேசிய அரசு உருவாகுமானால் அது இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடலாம்.
தேசிய அரசுக்கான இணக்கப்பாடு இல்லாவிட்டால் நாம் பொது தேர்தலை சந்திக்கலாம். அதன்பிறகு உருவாகும் அரசு, இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடும்.
தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில், இந்த அரசு அகற்றப்படுவதன் மூலம் ஒரு ஜனநாயக இடைவெளி உடனடியாக ஏற்படும் என்பதையும், அதை அடிப்படையாக கொண்டு நாம் முன்செல்ல வேண்டும் என்பதையும் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகின்றேன்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais2.html

Geen opmerkingen:

Een reactie posten