இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்களிப்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன். பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் புதுடில்லியை சென்றடைந்தனர்.
http://www.athirvu.com/newsdetail/839.html
Geen opmerkingen:
Een reactie posten