தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

பதட்டமான சூழலில் வன்முறையை தூண்டும் பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர்? ஆனந்தன் எம்.பி

எம் மீதான குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள்: கலகொட அத்தே ஞான­சார தேரர் சவால்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 06:09.10 AM GMT ]
முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­த­லுக்கு எம்­மீது குற்றம் சாட்­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என பொதுபல சேனாவின் பொதுச் செலயளாலர் கலகொட அத்தே ஞான­சார தேரர் தெரிவித்துள்ளார்.
எம்­மீ­தான குற்றச் சாட்­டுக்­களை ஆதா­ரத்­துடன் நிரூ­பித்து காட்­டுங்கள் என்று பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களால் பொது மக்­களின் சொத்­துக்கள் நாசப்­ப­டுத்தப்படுவது கண்­டிக்­கத்­தக்க விடயம் எனவும் அவர் கூறினார்.

அளுத்­கம சம்­பவம் மற்றும் அதன் பின்னர் இடம்­பெற்ற சில தாக்­குதல் சம்­ப­வங்­களில் பொது­பல சேனா பௌத்த அமைப்­பிற்கு தொடர்­புள்­ள­தென முஸ்லிம் கட்­சிகள் அமைப்­புகள் மற்றும் அமைச்­சர்கள் சிலர் குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அளுத்­கம சம்­ப­வத்­திற்கும் எமது அமைப்­பிற்கும் எவ்­வித தொடர்பும் இல்­லை­யென ஆரம்­பத்தில் இருந்தே கூறி வரு­கின்றோம். எனினும் எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி எம்மை இழி­வு­ப­டுத்தும் செயலை எவரும் செய்ய வேண்டாம்.

முஸ்லிம் மத தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நாம் குரல் கொடுக்­கின்­ற­மை­யினால் பொது­ப­ல­சேனா அமைப்பு இன­வாத அமைப்­பா­காது. இன்றும் பல இஸ்­லா­மிய மதத்­த­வர்கள் எமது உத­வி­களை நாடியும் எமது பாது­காப்­பினை கேட்டும் வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எவ்­வித தயக்­கமும் இன்றி நாம் உதவி செய்­கின்றோம்.

நாட்டில் சிங்­கள பௌத்த மக்கள் எவ்­வாறு உரி­மை­களை அனு­ப­விக்க முடி­யுமோ அதே உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கும் உண்டு. எனினும் முஸ்லிம் மத வாதத்­தி­னையும் தீவிர வாதத்­தி­னையும் பரப்பி சிங்­கள தமிழ் இனத்தை அழிக்கும் தீவி­ர­வாத செய­லுக்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அதேபோல் அளுத்­கம சம்­ப­வத்தில் பொது­ப­ல­சேனா அமைப்­பினர் தொடர்பு பட்­டுள்­ளனர் என்றால் அதனை ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பித்து காட்ட வேண்டும்.
முஸ்லிம் கட்­சி­களும் ஊட­கங்­களும் எம்மை சாடு­வ­தனால் சிங்­கள பௌத்த மக்கள் எம்மை நிரா­க­ரிக்­கப்­போ­வ­தில்லை மத்­திய கிழக்கில் சென்று தீவி­ர­வாத தலை­வர்­களை சந்­தித்து முஸ்லிம் தீவி­ர­வாதக் கொள்­கை­களை இலங்­கைக்குள் பரப்­பி­யது இந்த முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் அமைப்­புக்­க­ளி­னதும் தலை­வர்­க­ளே­யாவர். முதலில் அவர்­களை அர­சாங்கம் தண்­டிக்­காது எம்மை சாடு­வதை நாம் கண்­டிக்­கின்றோம்.

முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் அதி­க­ளவில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. அப்­பாவி முஸ்லிம் மக்­களை மத தீவி­ர­வா­தத்­திற்குள் உட்­ப­டுத்தி நாட்­டிற்கு எதி­ராக ஏவி விடும் செயலை முஸ்லிம் அமைப்­புக்கள் செய்­கின்­றன. இதுவே நாட்டில் இனக் கலவரம் ஏற்படவும் மோதல்கள் உருவாகவும் காரணமாகவும் அமைந்துள்ளது.
தீவிரவாதிகளின் வன்முறைகளினால் அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சேதமாகின்றது. அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeo6.html
ரவூப் ஹக்கீம் பதவி விலக வெண்டும்: அஸ்கிரிய பீடம்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 06:32.55 AM GMT ]
முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பதவி விலகுமாறு பௌத்த மத பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் இனவாதச் செயற்போக்கு அவரது அமைச்சர் பதவிக்கு இழுக்கானதாகும். எனவே அவர் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும். - இவ்வாறு கோரியிருக்கின்றது அஸ்கிரிய பீடம்.
தங்களுக்கு மாறாகச் செயற்பட்டுவரும் மேற்குலகுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் பெரும் போராட்டம் நடத்தி வரும் இந்த வேளையில், அமைச்சர் ஹக்கீம் மேற்குலகினதும் ஐ.நாவினதும் பிரதிநிதிகளுக்குப் பின்னால் போய், தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அதற்கு சர்வதேச கவனிப்பை வழங்கி அதன் மூலம் அத்தரப்புக்களின் இலங்கை எதிரப்புப் போக்குக்கு ஒத்துழைத்து, உதவியும் வருகிறார்.
அளுத்கமவிலும் பேருவளையிலும் அண்மையில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களை தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவர் வசமாகப் பயன்படுத்துகின்றார் என்றும் அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது. "ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் போக்கில் இருந்து அவர் விலகிச் செல்கின்றார்.
மேற்குலக சக்திகளின் எதிர்பார்ப்புக்களையும், விருப்புக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர் செயற்படுகின்றார் என்பது தெளிவு. நாட்டுக்கு அபகீர்த்தி மற்றும் அழிவை ஏற்படுத்தும் அவரது போக்கை முஸ்லிம்கள் கூட அங்கீகரிக்க மாட்டார்கள்.
அவர் நெருப்புக்கு மேலும் எரியூட்டுகின்றார்." - என்று அஸ்கிரிய பீடத்தின் குழு உறுப்பினர் வண. மெதகம தம்மானந்த தேரர் சொன்னார். எல்லா சமூகத்தையும் சமமாக மதிக்க வேண்டிய ஹக்கீம், அதைவிடுத்து, தனது பக்கச்சார்பான போக்கு மூலம் பிற்போக்குச் சக்திகளின் பக்கம் சாய்கின்றார் என்றும் தேரர் குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaeo7.html
பதட்டமான சூழலில் வன்முறையை தூண்டும் பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர்? ஆனந்தன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 06:59.28 AM GMT ]
பதட்டமான சூழ்நிலை நிலவும்போது வன்முறையைத் தூண்டத்தக்க ஒரு பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர் என்று கேள்வி கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட போது பொலிஸாரிடம் துப்பாக்கி இல்லாததால் அவர்களால் அதனைத் தடுக்க முடியவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
ஒரு கடுமையான வன்முறை நிலவும் சூழலில் துப்பாக்கி இல்லாத பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை என்பது நம்பக்கூடிய நடவடிக்கையாகத் தெரியவில்லை என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும், இனவெறித் தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பேருவளை, அளுத்கம நகரங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறியாட்டமும், அதைத் தொடர்ந்து மத்துகம, பெலிவத்தை, பதுளை, தெஹிவளை ஆகிய இடங்களுக்கு பரவிய முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைப்புச் சம்பவங்களும், தாக்குதல் மற்றும் சூறையாடல் நடவடிக்கைகளும் நாம் ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்புவதுடன், ஆழ்ந்த மனக்கவலையளிப்பதாகவும், கண்டிக்கப்பட வேண்டியவையாகவும் அமைந்துள்ளன.
மேலும், நடைபெற்ற சம்பவங்களுக்கு பொலிஸாரின் மறைமுகமான ஆதரவும் இருந்ததா என்ற கேள்வியையும் எழுப்புவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது.
கடந்த வியாழன் அன்று குருத்துவத்த ரஜமகா விகாரையின் பிரதம குருவும், அவரின் சாரதியும் சில முஸ்லிம் இளைஞர்களுடன் தகராறு ஒன்றில் ஈடுபட்டனர்.
அதையடுத்து அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவரின் கை துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு அங்கு ஒரு பதட்டமான சூழல் நிலவியது. அதை அடுத்து அளுத்கம நகரில் பொதுபல சேனாவினால் ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
வெளியிடங்களிலிருந்து பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டு இறக்கி விடப்பட்டவர்களே அதில் கலந்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தினர் தர்கா நகரில் தமது வெறியாட்டத்தை ஆரம்பித்தனர் என்றும் அதில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கடைகளும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரியூட்டப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில் அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட மூன்று முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம் மக்கள் ஓடிச்சென்று நான்கு பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்த போதும், அங்கு வைத்தும் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவை பொலிஸார் பார்த்திருக்கவே இடம்பெற்றன என்று முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தக்கலவரங்கள் பேருவளை, மத்துகம, வெலியத்த, பதுளை, தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கும் பரவி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கால்நடை பண்ணையில் புகுந்த வன்முறையாளர்கள் அதன் காவலாளியை கொடூரமாகத் தாக்கியதுடன், இன்னொருவரை படுகாயப்படுத்தினர்.
இறந்த நால்வரில் ஒருவர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவும்போது வன்முறையைத் தூண்டத்தக்க ஒரு பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர் என்பது தான் இங்கு எழும் முதல் கேள்வி.
அது மட்டுமன்றி பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண, முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட போது பொலிஸாரிடம் துப்பாக்கி இல்லாததால் அவர்களால் அதனைத் தடுக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு கடுமையான வன்முறை நிலவும் சூழலில் துப்பாக்கி இல்லாத பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை என்பது நம்பக்கூடிய நடவடிக்கையாகத் தெரியவில்லை.
எனவே இது பொதுபல சேனாவினால் திட்டமிட்ட முறையில் பொலிஸாரின் அனுரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு இன விரோத வன்முறை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களோ உறுப்பினர்களோ, இச்சம்பவங்கள் தொடர்பாக எந்தவித வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கிய போதிலும், களுத்துறைச் சம்பவங்களுக்கு எதிராக அங்கு ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கப்படவில்லை.
முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை, இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கத்தவறி வருகின்றன.
தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கி, இன மத தனித்துவங்களை அழித்து, எமது உரிமைகளை அழிப்பதை நோக்கியே சிங்கள பேரினவாத சக்திகள் அரசின் முழுமையான ஆதரவுடன் ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகின்றன.
ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாக நின்று சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களுக்கு பேரினவாத சக்திகளால் இழைக்கப்படும் அநீதிகளைப் பூசி மெழுகி மறைத்து ஒரு சமரசப் போக்கை கையாளும் அதே வேளையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை வலுவாக்குவதில் அக்கறை காட்டி வருகின்றனர்.
ஒடுக்கப்படும் சிறுபான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டு எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்.
இன்று ஆட்சியாளர்களும், சிங்களப் பேரினவாதிகளும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கும் அநீதிகளைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களாகிய நாமும், முஸ்லிம் மக்களுடன் கரம் கோர்க்கின்றோம் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaepz.html

Geen opmerkingen:

Een reactie posten