மகளைக் கொடுமைப்படுத்திய தாய்
வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த கோபாலபிள்ளை சிறிதேவி எனும் பெண் தனது முதலாவது கணவருக்குப் பிறந்த ரவிச்சந்திரன் ஹிஸாலி எனும் பெண் பிள்ளைக்கு கடந்த 07.02.2007 அன்று உடல்நலப் பாதிப்பு மற்றும் வேதனை ஏற்படுத்தும் வகையில் உடலில் காயங்களை ஏற்படுத்தி, தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைப் புரிந்தார் என தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிரியான கோபாலபிள்ளை சிறிதேவி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், எதிரிக்கு பத்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபா தண்டமும் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.
15 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தத் தவறினால் 6 மாத கால கடூழியச் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு கட்டத் தவறினால் ஒரு வருட கழியச் சிறைத் தண்டனையும் எதிரி அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கைதான மீனவர்கள் தமிழ் நாட்டை சென்றடைந்தனர்
அப்போது, செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த இந்திய மீனவர்கள், நாங்கள் அனுராதபுரம் சிறையில் 2 நாள்கள் இருந்தோம். அதற்கு பின்னர் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி எங்களை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்தினர். அப்போது நீதிபதி, எங்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை ஜூலை 4ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். எங்களை விடுவித்தது மகிழ்ச்சி.
எனினும் தொழில் உபகரணங்களை அவர்கள் வைத்திருப்பதால் நாம் மீளவும் தொழிலுக்கு செல்ல முடியாதுள்ளது. இலங்கை மீனவர்கள்தான், இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே நாம் உங்களைக் கைது செய்தனர் என்றும் இலங்கைக் கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது கூறினர். இதன் மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள்தான் காரணம் என்பது தெளிவாகிறது – என்றனர்.
http://www.jvpnews.com/srilanka/72182.html
ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் புடுங்க முடியாது: அஸ்வர்
ஏனைய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் ஆறுமுகம் தென்டமான் பிரபா கணேசன் பார்த்து ரசித்ததும் குறிப்பிடத் தக்கது
http://www.jvpnews.com/srilanka/72179.html
Geen opmerkingen:
Een reactie posten