தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை

ஐ.நா விசாரணைக் குழுவின் நிபுணர்கள் நியமனத்தை பிரித்தானியா வரவேற்பு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:53.26 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வரவேற்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த விசாரணையானது ஒரு முக்கியமான படிக்கல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்களில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்று அறிவித்தார்.
விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்ட விசாரணைக்கான நிபுணர்களை நியமித்துள்ளதாக நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை நான் வரவேற்கின்றேன்.
இலங்கிலாந்து இந்த விசாரணைகளுக்கு தொடர்ந்தும் அழைப்பு விடுத்துடன் அதனை பாதுகாக்க முக்கிய பங்காற்றியது.
இந்த விசாரணையானது உண்மையை நிலைநாட்டுவதற்கும் இலங்கயைில் நல்லிணக்கத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
மார்டி அத்திசாரி, அஸ்மா ஜஹாங்கீர், சில்வியா கார்ட்ரைட் ஆகியோரை கொண்ட ஒரு வலுவான தெளிவான விசாரணைக்குழுவை மனித உரிமை பேரவை நியமித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்துகிறேன்.
விசாரணையில் ஈடுபடுபவர்கள், அச்சுறுத்தல் இன்றி, அச்சமின்றி விசாரணைகளைில் ஈடுபட முடியும் என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேணடும்.
அரசியல் தீர்வு, நல்லிணக்கம், நீதி, பொறுப்புக் கூறல், ஆயுத மோதல்கள் மற்றும் இன்றைய காலத்தின் கவலை தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் ஊடாக தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வருகின்றேன்.
இலங்கையில் இந்த பிரச்சினைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான வசதிகளுக்கு உதவிகளை வழங்க பிரித்தானிய அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns1.html
ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 01:17.30 PM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சு ஈராக்கு பயணம் செய்வது தொடர்பான பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அந்த நாட்டின் வன்முறைகளின் விளைவாக ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் பாதுகாப்பு சூழ்நிலைகள் மோசமடைந்து வருவதை கவனத்தில் கொண்டு இலங்கை பிரஜைகள் அந்நாட்டுக்கு பயணம் செய்வது தொடர்பிலான விடயங்களை மறு அறிவிப்பு வரும் வரை கவனமாக கையாள வேண்டும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
ஈராக்கில் தற்போதுள்ள இலங்கையர்கள், அங்கு ஏற்பட்டு வரும் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளையும் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை +96477704847458 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் slembirq@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பிரஜைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns2.html

குருதி பூஜை அரசுக்குத்தான் தேவை, எனக்கு அல்ல! வட்டரக்க விஜித தேரர்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 08:57.51 AM GMT ]
இந்நாட்டில் தற்போது குருதி பூஜை நடத்துமளவுக்கு விகாரமான வெறிபிடித்தவர்கள் அரசாங்கத்தினுள் இருப்பதாக வட்டரக்க விஜித தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், பொதுபல சேனாவின் அடாவடிகளை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் கடத்தப்பட்ட அவர் கடும் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
எனினும் அவரை யாரும் தாக்கவில்லை என்றும், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளதாகவும் போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், கற்கால மனிதர்கள் போன்று குருதி பூஜை நடத்துமளவுக்கு எனக்கு மனோ விகாரம் கிடையாது.
அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தான் அவ்வாறான வெறி பிடித்துள்ளது.
அதன் காரணமாகவே எதுவித குற்றமுமற்ற, நாட்டின் அமைதிக்காக, இன நல்லிணக்கத்துக்காக குரல் கொடுத்த என்னைக் கைது செய்துள்ளார்கள்.
அளுத்கமையில் இனக்கலவரத்தை மூட்டி அப்பாவிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு அளித்துள்ளார்கள்.
இதுதான் இந்நாட்டின் இன்றைய நிலை. எனினும் சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் இன நல்லிணக்கத்துக்கான எனது முயற்சிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பொலிசாரின் குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை வட்டரக்க விஜித தேரரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnq5.html
ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 08:35.28 AM GMT ]
இலங்கையில் ஜிஹாத் மற்றும் தாலிபான் அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்று கொழும்பில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
சுமார் ஐந்து மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் ஜிஹாத், தாலிபான் அமைப்புகள் குறித்தும் அந்த அமைப்புக்களுடன் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் கடுமையான தொணியில்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அளுத்கம இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது பிரபல வர்த்தக நிலையமான நோலிமிட் நிறுவனம் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவில்லை.
அதனைக் கண்டித்த ஐவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனைச் சாட்டாக வைத்து புலனாய்வுப் பிரிவினர் முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகியோர் இலங்கையில் ஜிஹாத், தாலிபான் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பும் இல்லை என்று உறுதியாக தெரிவித்திருந்த விடயம் குறித்து முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலையில், பாதுகாப்பு அமைச்சுக்கே தெரியாத தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை பகிரங்கப்படுத்தவோ, பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கவோ முன்வருமாறு புலனாய்வுப் பிரிவினரை அவர் மடக்கியுள்ளார்.
அவரின் வாதத்துக்கு முன் செயலற்றுப் போன புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை இடையில் நிறுத்திவிட்டு, முஜிபுர் ரஹ்மானை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் நோலிமிட் தாக்குதல் சம்பவத்துடன் முஜிபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுமாறு அரச தரப்பு ஊடகங்களிடம் ரகசிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnq3.html

Geen opmerkingen:

Een reactie posten