நீதிமன்ற கூண்டில் ஏறிய கோட்டபாய: அதனால் மீடியாக்களை தடுத்தனர் பொலிசார் !
02 June, 2014 by admin
இருப்பினும் அங்கே ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் அனைத்து மீடியாக்காரர்களையும் உள்ளே செல்லவிடாது தடுத்துவிட்டார்கள். 27ம் திகதி நடைபெற்ற இந்த வழக்கில், கோட்டபாய ராஜபக்ஷவை குறுக்கு கேள்வி கேட்டவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார். இவரே இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார் என்பது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். சுமந்திரன் குறுக்கு கேள்வி கேட்ப்பதையும் அதற்கு கோட்டபாய பதில் கூறுவதையும் யாரவது படம் எடுத்துவிடக் கூடாது என்பதில் சிங்கள பொலிசார் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். நீதி மன்றத்தினுள் புகைப்படம் எடுக்க முடியாது தான். ஆனால் எவராவது எடுத்திருந்தால் நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6913
லண்டனில் சிங்கள கிரிகெட் அணிக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது !
02 June, 2014 by admin
தமிழினத்தின் அழிவில் தங்களை கட்டியெழுப்ப நினைக்கும் சிங்கள அரசின் துடுப்பாட்ட அணியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியத்தமிழ் இளையோர் அமைப்பினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. லண்டன் சென் ஜோன்ஸ் வூட்டில் அமைந்துள்ள "லோட்ஸ்" மைதானத்திற்கு வெளியே இந்த பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது. எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் ஒவ்வொருவரும் சிங்கள இனப்படுகொலை அரசுக்கெதிரான தங்கள் எதிர்ப்பை மிகவும் ஆவேசமாக வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே இதில் கலந்துகொண்டனர் என்பது வருந்தத்தக்க விடையமாகும்.
தமிழர்கள் குறைந்த அளவில் கலந்துகொண்டதால், துடுப்பாட்டத்தை பார்க்கச் சென்ற சிங்களப் பெண்கள் அங்கே கூடி நின்ற தமிழர்களைப் பார்த்து அங்க அசைவுகளால் கேலிசெய்துள்ளார்கள். இதேவேளை சிங்கள இளைஞர்களும் கைகளையும் விரல்களையும் காட்டி தமிழர்களை இழிவுபடுத்தி நக்கல் அடித்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட எங்கள் உறவுகளின் இரத்தத்தில் தோய்ந்த அந்த சிறிலங்கா கொடியைத் தாங்கியபடி அந்த துடுப்பாட்ட அணியினர் விளையாடவந்துள்ளதை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு ஏன் எமது பெரும்பாலான மக்களுக்கு வரவில்லை என்பது வேதனையளிக்கும் கேள்வியாக உள்ளது.
தாயகத்தில் அவலங்கள் சுமந்து, ஆபத்தான நிலையில் தமது இருப்பை உறுதி செய்ய போராடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்கள் தான் என்பதனை புகலிட தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து எழுச்சிபெறவேண்டும் என தமிழ் இளையோர் அமைப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.



தமிழர்கள் குறைந்த அளவில் கலந்துகொண்டதால், துடுப்பாட்டத்தை பார்க்கச் சென்ற சிங்களப் பெண்கள் அங்கே கூடி நின்ற தமிழர்களைப் பார்த்து அங்க அசைவுகளால் கேலிசெய்துள்ளார்கள். இதேவேளை சிங்கள இளைஞர்களும் கைகளையும் விரல்களையும் காட்டி தமிழர்களை இழிவுபடுத்தி நக்கல் அடித்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட எங்கள் உறவுகளின் இரத்தத்தில் தோய்ந்த அந்த சிறிலங்கா கொடியைத் தாங்கியபடி அந்த துடுப்பாட்ட அணியினர் விளையாடவந்துள்ளதை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு ஏன் எமது பெரும்பாலான மக்களுக்கு வரவில்லை என்பது வேதனையளிக்கும் கேள்வியாக உள்ளது.
தாயகத்தில் அவலங்கள் சுமந்து, ஆபத்தான நிலையில் தமது இருப்பை உறுதி செய்ய போராடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்கள் தான் என்பதனை புகலிட தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து எழுச்சிபெறவேண்டும் என தமிழ் இளையோர் அமைப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6912
மோடிக்கு மேலும் ஆத்திரமூட்டும் செயல்: 29 இந்திய மீனவர்கள் சிங்களத்தால் கைது !
02 June, 2014 by admin
நீங்கள் எதனை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் நாம் எதனை நினைக்கிறோமோ அதனையே செய்வோம் என்ற வகையில் மகிந்தர் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறார். இலங்கை கடற்படையினரின் இச் செயலானது, நரேந்திர மோடியை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இச்செயலுக்கு டெல்லி அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6911
Geen opmerkingen:
Een reactie posten