தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

சுனாமி காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரிக்கு உளவியல் அழுத்தம்

சுனாமி இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு சுனாமி இடம்பெற்ற காலத்தில் குறித்த அதிகாரி இலங்கையில் கடமையாற்றியிருந்தார்.
டேவிட் கொலின்ஸ் என்ற 45 வயதான பொலிஸ் பயிற்சியாளரே இவ்வாறு மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கொலின்ஸ் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணியினால் தமக்கு உளவில் ரீதியான அழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்த கொலினஸ் 400, 000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நட்ட ஈடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக் கிட்டியமை மகிழ்ச்சியளிப்பதாக கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான சடலங்களை அடையாளம் காண உதவியளித்தாகவும், இந்த பணிகளினால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafxy.html

Geen opmerkingen:

Een reactie posten