தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி



கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவுக் கூட்டம்! மஹிந்த பங்கேற்கவில்லை கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சு
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 01:25.53 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கக் கோரி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கண்டியில் இடம்பெற்று வருகின்றது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்கூட்டத்தில் ஐ.ம.சு கூட்டணியின் மாகாண சபை உறுப்பினர்கள் 87 பேர் கலந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகள் பலர் மேடையில் நின்று கொண்டே தான் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டிப் பேரணியிலும் மஹிந்த பங்கேற்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தும் இரண்டாவது பேரணியிலும் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.
கண்டியில் இந்தப்பேரணி இன்று இடம்பெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ச அனுப்பி வைத்த செய்தி ஒன்றே வாசிக்கப்பட்டது.
இந்தப் பேரணியை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பல கட்சிகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmryF.html


ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 01:10.05 PM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு– புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து, பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு முன்னெடுத்திருந்தன.
இதேவேளை ஜெயக்குமாரி தொடர்பாக வழக்கு விசாரணை இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நடைபெற்றது.
எனினும் இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயக்குமாரி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸார்,
நேற்று வியாழக்கிழமை விடுமுறை தினம் என்றதால் நீதிமன்றத்திடம் இருந்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சரியான தகவல் கிடைக்காத காரணத்தினால் அவரை ஆஜர்படுத்த முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயக்குமாரியின் புதல்வியான விபூசிகா தற்போது கிளிநொச்சி மகாதேவா ஆசிரமத்தில் உள்ள நிலையில் அவரது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலரான நளினி இரத்தினராஜா தெரிவிக்கின்றார்.
அத்துடன் ஜெயக்குமாரிக்கு பிணை வழங்க நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஒருவரும் முன்வராதிருப்பதாவும் அவர் கவலை வெளியிட்டார்.
இதேவேளை  கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுதலை செய்யுங்கள், 'விபூசிகாவின் தாயார் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை இதுவரைக்கும் அரசு ஏன் வெளியிடவில்லை?, குற்றம் செய்யாதவரை கைது செய்துவைத்திருப்பதா நல்லாட்சி?, தாய், தந்தை, உறவினர்களை இழந்து தனியாக வாழும் சிறுமி விபூசிகாவைப் பாதுக்காப்பதற்கு எவரும் இல்லையா?, இதுவா இந்த நாட்டின் சிறுவர் சட்டம்?, யுத்தம் நிறைவடைந்தாலும் மக்களின் மனங்களில் இருந்து யுத்தவடுக்கள் இன்னும் மாறவில்லை போன்ற கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmryE.html

Geen opmerkingen:

Een reactie posten