அனைவரும் ஒரு கணம் திகைத்துப்போனார்கள் ! வலி.வடக்கில் உறுதி அளிக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை.அத்துடன் மக்களது காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு சத்தமின்றி ஆலயங்கள்,பாடசாலைகள்,தேவாலயங்கள் மற்றும் மக்களது குடியிருப்புக்கள் இடிக்கப்படுகின்றன என்று அவர் பேசி முடிக்க , பெரும் கைதட்டல் கிடைத்தது. இதனை நன்றாக அவதானித்துக்கொண்டு இருந்த சந்திரிக்கா தனது உதவியாளரிடம் ஏதோ கூறினார். அவர் உடனே சென்று , மைத்திரி காதில் ஏதோ ஓதினார். இதனை அடுத்து பேச எழுந்த மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும் என்றார்.
மேலும் விக்கினேஸ்வரன் ஐயா பேசியதற்கு பதில் வழங்கும் வகையில் மைத்திரியின் பேச்சு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்க விடையம் என்று , இதனை நேரில் பார்த்த அதிர்வின் யாழ் நிருபர் மேலும் தெரிவித்தார். விக்கினேஸ்வரன் இவ்வாறு ஒரே மேடையில் வைத்து குறிப்பிட்டது , சந்திரிக்கா அன் கோவை சற்று அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. கொழும்பு செல்லும் அவர்கள் நிச்சயம் சம்பந்தனுடன் இது தொடர்பாக பேசி விக்கினேஸ்வரனை அடக்கி வாசிக்குமாறு கூறச் சொல்வார்கள் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten