தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை !

வெலெ சுதாவின் முக்கிய முகவர் சுராஸ் அகமட் 15 வயதுச் சிறுமியுடன் கைது !

[ Mar 04, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 17260 ]
இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் , வெலெ சுதாவின் முக்கிய முகவர் என சந்தேகிக்கப்படும் சுராஸ் அகமட் என்பவர் ஹபரனையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்ட வேளை அவருடன் 15 வயது சிறுமியும் காணப்பட்டதாகவும், குறிப்பிட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய வேளை அவர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் குறிப்பிட்ட சிறுமியினது ஆபாசப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர். இதனை தொடந்து அவர் மீது சிறுமியை தடுத்து வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு பதியப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னர் இந்த நபரிற்கு எதிராக போதைப்பொருள் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. (அப்போது மகிந்தரின் செல்வாக்கு அவருக்கு இருந்தது)
பொலிஸார் வெலெ சுதாவின் முகவர்களை தேடி வருவது தெரியவந்ததும் குறிப்பிட்ட நபர் கொழும்பிலிருந்து தப்பி ஹபரனை சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஓரு மாதமாக நாங்கள் அவரை தேடி வந்துள்ளோம்.ஓரு முறை கல்கிசையில் அவரை கைதுசெய்ய முயன்றவேளை அவர் அங்கிருந்து தப்பினார் என்றும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளையை சேர்ந்த அகமட் ,வெலெ சுதாவின் நடவடிக்கைகளில் நெருங்கிய பங்கை வகித்தார்,எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/2467.html

ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை !

[ Mar 04, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 25365 ]
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் (ஈழத் தமிழர்) ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த 2 குற்றவாளிகளும் பாதுகாப்புப் படையினரும் இரண்டு விமானங்களில் ஏற்றிச் செல்லவுள்ளனர். அதற்காக 100 பொலிசார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவசவாகன இராணுவ படைப்பிரிவு பாலி கெரோபொகன் சிறைச்சாலைக்கு வெளியியே காவல் காத்து நிற்கிறது. பாலி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் இருவரும் விமான மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்...
2005ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து ஹெரோயின் கடந்த முயன்றதாக சான் மற்றும் சுகுமாரன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்திவிட்டதாக இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். இவர்களது கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு மேலதிகமாக சட்ட ரீதியான வாய்ப்புகள் ஏதும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. இம்மாதத் துவக்கத்தில், தற்போது உயிரோடு இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி கோரினர். ஆனால் அதனையும் இந்தோனேசியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/2464.html


Geen opmerkingen:

Een reactie posten