[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:23.42 PM GMT ]
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை மாவட்டங்கள் தோறும் மேற்கொண்டு மகிந்த அணி ஒன்றை உருவாக்கி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட செய்து, அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக இந்த அணியை உருவாக்குவதே நோக்கம் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த அணியை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களையும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் முன்னெடுத்து வருவதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் மெதமுலனவில் நடைபெற்றதுடன் மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் மகிந்தவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஒன்றிணைத்து, வீடுகள் மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், மகிந்தவுக்கு ஆதரவான பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை இணைத்து பிரதேச சபைகளின் அதிகாரத்தை தற்காத்து கொள்ளவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைப்பற்றியுள்ளதுடன் மகிந்த ஆதரவாளர்களாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.
இதன் காரணமாக மகிந்தவுக்கு ஆதரவாக அவர்களை பயன்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ளது. இதனால், மகிந்தவுக்கு ஆதரவான தனியான அணி ஒன்றை உருவாக்குவதே கட்சியில் அதிகாரத்தை பெற பொருத்தமான வழி என மெதமுலனவில் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல மாவட்டங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் மகிந்த ஆதரவு பாதுகாப்பு தரப்பினருக்கு அதிக பொறுப்புகளை வழங்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு கீழ்ப்படிந்த அதிகாரிகள் தற்போதும் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களில் இருப்பதால், இந்த திட்டத்தை வலுப்படுத்த உதவியாக அமையும் எனவும் இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்டங்கள் மற்றும் தொகுதி வாரியாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி
நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் நலன் வேண்டி யாப்பஹூவ ராஜமஹா விகாரையில் இன்று மாலை நடைபெற்ற போதிபூஜையில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த போதிபூஜையின் பலத்தால், பழிவாங்கல்கள், ஆயிரக்கணக்கான மக்களை தொழில்களில் இருந்து வெளியேற்றும் கலாச்சாரம் மாறி நாட்டுக்கு நல்லகாலம் பிறக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பேசிய முன்னளா் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க, மீண்டும் மகிந்த ராஜபக்ச யுகத்தை ஏற்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6A.html
இதுதான் ஏழைகளின் நிலை: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த யாரும் முன்வரவில்லை
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:20.01 PM GMT ]
கனகராயன்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி செல்வராசா சரண்யாவைப் பாலியல் வன்கொடுமைப்படுத்தி சிறுமியின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்
சிறுமி, தாய் தந்தையர் அற்றவர் என்பதாலும் சிறுமியின் குடும்பம் ஏழ்மைக் குடும்பம் என்பதாலும் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாவர்கள் இன்னமும் கைது செய்யப்படாது ஏனோதானோ எனப் பொலிஸாரும் உரிய தரப்பினர்களும் செயற்பட்டு வருவதாக ஊரவர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சிறுவர், பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எந்தவொரு அமைப்புக்கள்கூட இதுவரைக்கும் சிறுமியின் தூஸ்பிரயோகம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை எனக் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இப்படியான ஒரு நிலைமை பணபலமும் வசதிவாய்ப்பும் கொண்டவர்களினது குடும்பத்தில் நடைபெற்றிருந்தால் இதுவரைக்கும் ஏனோதானோ என இப்படி விட்டிட்டு இருப்பார்களா?
தாய், தந்தையர் இருவரையும் இழந்த நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்வதற்குக்கூட ஒரு வீடற்ற நிலையில் வயதான விபரமற்ற பாட்டியாருடன் வசித்து வந்தவர் என்பதாலேயே சிறுமி இறந்து இன்றைக்கு 14 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேகத்தில் ஒருர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.
சிறுமியின் பாலியல் வன்கொடுமை, அதனால் ஏற்பட்ட மரணத்துடன் தொடர்புடையவர்கள் என உறவினர்களாலும் ஊரவர்களாலும் கிராமத்தின் பொது அமைப்புக்களாலும் சிலரது பெயர்களைச் சுட்டி ஆதாரங்களுடன் இனங்காட்டப்படுகின்றபோதிலும் அவர்களைக் கைதுசெய்து விசாரிக்காது பொலிசார் பக்கச் சார்பாகச் செயற்படுவதாகவும் ஊர் மக்களையும் ஊர் பொது அமைப்புக்களையும் பொலிசார் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இலங்கையில் பெண்கள் சிறுவர் உரிமைகளுக்காக் குரல்கொடுக்கும் பொது அமைப்புக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்கூட தாய், தந்தையர் அற்ற ஏழைச் சிறுமி செல்வராசா சரண்யாவின் பாலியல் வன்கொடுமைக் குற்றவாழிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முன்வரவில்லை எனவும் ஏழைகளுக்கு உதவமாட்டார்கள் என்றும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி செல்வராசா சரண்யா தனது பாட்டியாருடன் தனது 5 சகோதரச் சிறார்களுடன் நீண்ட காலமாக வாழ்ந்த வீட்டைப் பாருங்கள். இதற்குள்ளதான் சாப்பாடு, படிப்பு என எல்லாமே இதுதான் இலங்கை நாட்டின் ஆசியாவின் அதிசயமாம்
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5I.html
Geen opmerkingen:
Een reactie posten