அவுஸ்திரேலியா செல்வதற்கு தற்காலிக விசாவுக்காக விண்ணப்பித்திருந்த இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்தவ நிலையம் ஒன்றில் பணிபுரிய இலங்கைத் தம்பதியருக்கு அந்தநாட்டு குடிவரவுத் திணைக்களம், தற்காலிக விசா வழங்கியுள்ளது.
இந்த நிலையில் குறித்த தம்பதியினரின் மகள் எலிசா பொன்சேகாவிற்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி மனநலிவு (Down syndrome) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தனது மகள் ஆரோக்கியமாக இருப்பதாக, குறித்த சிறுமியின் தந்தை ஏஞ்சலோ பொன்சேகா கூறியுள்ளார்.
தனது மகளை தாமே பொறுப்பேற்பதாகவும் அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவி தமக்குத் தேவையில்லை எனவும் அவரது தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் தாம் அரசாங்கத்தை நம்பியிருக்கவில்லை எனக் கூறிய அவர், ஒரு பெற்றோராக எலிசாவுக்கு அனைத்தையும் வழங்கியதாகவும், அவுஸ்திரேலியாவுக்கு சென்றாலும் அதனையே செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4H.html
Geen opmerkingen:
Een reactie posten