தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம் (படம் இணைப்பு)

விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்கள் வித்தியாசாலையில்.( வீடியோ, படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில்இ குறித்த நீரை அருந்திய மாணவர்கள் 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நீர் தாங்கியிலிருந்த குடிநீரை பருகியிருக்கின்றனர்.

இந்நிலையில் நீரை குடித்த மாணவர்கள் அனைவரும் மயக்கமடையும் நிலையில் இருந்தமையினையடுத்துஇ ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்களின் உதவியுடன் மாணவர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தினையடுத்து மாணவர்கள் குடித்த குடி நீர் இருந்த தாங்கியை சோதித்தபோது அதனுள் களைகளுக்கு பயன்படுத்தப்படும் களைநாசினி கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன்இ குறித்த களைநாசினி இருந்த போத்தலும் நீர் தாங்கியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த விஷப் போத்தலும் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் குடிநீரில் கலக்கப்பட்டது ஒகனோ பொஸ்பேற் எனப்படும் களைநாசினி என கண்டறியப்பட்டுள்ளதுடன்இ குறித்த களைநாசினி திட்டமிட்டே மாணவர்களின் குடிநீர் தாங்கியில் கலக்கப்பட்டுள்ளதாக ஊர் மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த சம்பவத்தில் களைநாசினியை குடிநீரில் கலந்தவர்கள்இ நீர் விநியோகிக்கும் பிரதேச சபையின் மீது பழி சுமத்துவதற்காக இந்த செயலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளதுடன்இ குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை அடையாளம் காணுமாறும்இ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும்இ பாடசாலைக்கும் சென்ற வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர்கள்இ கிராமத்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதுடன்இ

வடமாகாண முதலமைச்சரின் பணிப்பிற்கமைவாக மேற்படி இரு அமைச்சர்களும் வடமாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரியிருப்பதுடன் முறைப்பாட்டையும் கொடுத்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் படை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் 78 மணித்தியாலம் வைத்தியசாலையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டதன்இ பின்னதாகவே விடுவிக்கப்படுவார்கள் என வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


19 Mar 2015

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764271&archive=&start_from=&ucat=1&
வெலே சுதாவின் கூட்டாளி "சித்தீக்" பாகிஸ்தானில் கைது (படம் இணைப்பு)
போதைப்பொருள் வர்த்தகர் வெலேசுதாவின் நெருங்கிய கூட்டாளியான, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர் மொஹம்மட் மகீன் மொஹம்மட் சித்தீக் என்பவரை பாகிஸ்தான் உளவுப் பிரிவு கைது செய்துள்ளது.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட சித்திக் இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

கொழும்பு, மருதானை, மொஹிதீன் மஸ்ஜித் வீதியைச் சோ்ந்த 46 வயதான சித்தீக், பாகிஸ்தான் பெண்ணொருவரை மணம்முடித்து அங்கு தலைமறைவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
19 Mar 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764727&archive=&start_from=&ucat=1&

6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம் (படம் இணைப்பு)
இந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு பிரதமர் மோடி தனது கைப்பட எழுதிய நன்றி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசைச் சேர்ந்த பாவ்யா ஆவ்தி என்ற 6 வயது சிறுவன் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஏழைக் குழந்தைகள் சிலரை பார்த்துள்ளான்.

அப்போது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பாவ்யாவின் மனதில் எண்ணம் எழுந்துள்ளது.

இதையடுத்து அந்த சிறுவன், அவனது தாத்தாவின் உதவியுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி, அதனுடன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.107-யையும், பிரதமரின் ஏழைக் குழந்தைகள் நலவாழ்வு திட்டத்திற்காக அனுப்பி வைத்துள்ளான்.

இந்நிலையில், அந்த கடிதத்தை ஏற்று கொண்ட பிரதமர் மோடி, கடிதத்தை பெற்றுக் கொண்டதாகவும், நிதி அளித்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டு தனது கைப்பட எழுதிய கடிதத்தை பாவ்யாவுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், அந்த நன்றி கடிதத்தை பெற்ற சிறுவன் பிரதமரின் கடிதம் எதிர்பாராத பிறந்தநாள் பரிசு என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
19 Mar 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1426764899&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten