தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 maart 2015

ஆணைக்குழுவின் செயற்பாட்டில் நம்பிக்கையிழந்துள்ளோம்: காணாமல் போனோரின் உறவுகள்

சுதந்திரமாக செயற்பட வழிவகுக்குமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:29.17 PM GMT ]
சுதந்திரமாக செயற்படுவதற்கு கடந்த அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதந்திரமான முறையில் செயற்படுவதனை தடுக்கும் நோக்கில் கடந்த கால அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது என இலங்கை மனித உரிமைகள் பாதுகாவலர் மற்றும் எழுத்தாளர் ருக்கி பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார். 
இந்த கட்டுப்பாடுகளை புதிய அரசாங்கம் கலைவதன் மூலம் கருத்துக்களை சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளன.
மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ, மற்றும் இன்னொருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் 16ம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
மேலும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் ருக்கி பெர்ணான்டோவின் வெளிநாட்டு பயணங்கள், கருத்து சுதந்திரம், ஆகியவற்றிற்கு கடந்தகால அரசாங்கம் தடைவிதித்திருந்தது.
அதுமாத்திரமல்லாது, சில சிங்கள தேசியவாத குழுக்களும், சில ஊடகங்களும் அவரின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை தடுக்கும் வகையில் தேசத்துரோகி, தீவிரவாதி ஆதரவாளர் என முத்திரை பதித்தன.
இது தொடர்பில் அவரின் சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போதும் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை நீக்குவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைத்தால் சர்வதேசத்தில் அங்கீகாரம் கூடும்: உதய கம்மன்பில - இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகும் சாத்தியக்கூறு?
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:04.58 PM GMT ]
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் என பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால், சர்வதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு கூடுதலான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த பதவி கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் என்பதால், தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை எனவும் சர்வதேசத்திற்கு செய்திகளை கொண்டு செல்ல முடியும்.
முக்கியமான தருணங்களிலேயே தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படும். இரண்டாம் உலக போரின் போது பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தினார்.
எனினும் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு நடந்த போதும், சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போதும், புலிகளை தோற்கடித்த சந்தர்ப்பத்திலும் ஏற்படாத தேசிய அரசாங்கம், எந்த காரணத்திற்காக தற்போது அவசரமாக ஏற்படுத்தப்பட்டது?.
எதிர்க்கட்சி என்ற வகையில், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடத்தை ஏற்படுத்திக்கொள்ள ஜே.வி.பிக்கும் சந்தர்ப்பம் கி்டைத்துள்ளது. இது அந்த கட்சி பெற்றுள்ள வெற்றி.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது அவர்களுக்கு வெற்றியென்பது போல், அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இது வெற்றியாகும்.
இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்துள்ளது.
1956 ஆம் ஆண்டு தல்துவே சோமராம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை சுட்டுக்கொன்றார். 2015 ஆம் ஆண்டு மேலும் ஒரு சோமராமவினர் பண்டராநாயக்கவை அரசியல் ரீதியான கொலை செய்துள்ளனர்.
தல்துவோ சோமராமவுக்கு சட்டம் தண்டனை வழங்கியது. இந்த சோரமாக்களுக்கு எதிர்வரும் தேர்தலில் தண்டனை கிடைக்கும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளா
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகும் சாத்தியக்கூறு?
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமையினால் பாராளுமன்றத்தில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வியும், தேசிய அரசாங்கத்தின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்வாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனங்களை அடுத்து பாராளுன்றத்தில் எதிர்க்கட்சிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜே.வி.பியும் விளங்குகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ஜே.வி.பியை விடவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.
எனவே எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 12 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 60 ஆசனங்களும் ஜனநாயக கட்சிக்கு 07 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தினேஸை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்து
எதிர்கட்சி தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவரத்னவை நியமிக்குமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls6D.html


ஆணைக்குழுவின் செயற்பாட்டில் நம்பிக்கையிழந்துள்ளோம்: காணாமல் போனோரின் உறவுகள்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 11:44.50 AM GMT ]
காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு இன்று, காணாமல் போனோரை கண்டுபிடிக்கக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு மௌன ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளது.
இன்று காலை கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு முன்பாக தொடங்கிய மௌன ஊர்வலம் கிளிநொச்சி அரச செயலகத்தில் முடிவடைந்து அங்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை குறைவடைந்துள்ளமை.
நல்லாட்சி, ஜனநாயகம் மற்றும் சட்டமுறையிலான ஆட்சி முதலிய பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான கொள்கை விளங்கங்களை முன்வைத்து அதற்கான உறுதி மொழிகள் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழான ஸ்ரீலங்கா புதிய அரசு அதிகாரத்தை கைப்பற்றியது.
அதிகாரத்திற்கு வந்தவுடன் சர்வதேச தரத்திலான பொறுப்பு கூறக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்தி நம்பகத் தன்மை மிக்க உள்ளக பொறிமுறைகள் கைக்கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.
அத்தோடு இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும்,கௌரவத்துடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வை நோக்கி செயல்படுவதற்கான உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதி அளித்தது. நிகழ்ச்சி பதிவுக் குறிப்பு. நாட்டின் அதி முக்கிய விடயங்களை முன்னெடுப்பதற்கான 100 நாள் வேலைத் திட்டத்தையும் முன் வைத்தது.
துரதிஷ்டவசமாக இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் சில விடயங்களே அதில் உள்ளடக்கப்பட்டன. இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் வாக்குகளின் மூலமாகவே புதிய ஜனாதிபதியின் வெற்றி சாத்தியமாகியது என்பது எல்லோராலும் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் புதிய ஜனாதிபதியால் நியாயமாக அணுகப்பட்டு செயல்படுத்தப்படும் என தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தே இவ்வாறு செயல்பட்டனர். புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், முன்னைய ஜனாதிபதியால் காணாமல் போனவர்கள் விடயமாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை செயல்பாட்டு கால எல்லையை மேலும் 06 மாதங்களுக்கு நீடித்தார்.
புதிய அரசாங்கமானது முன்னைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு சர்வதேச நிபுணர்களின் சேவைகளை அவ்வாறே பெற்றுக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தது. கால எல்லை நீடிக்கப்பட்ட போது நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகள் ஏற்கனவே 18 மாதங்கள் பூர்த்தியடைந்திருந்தன.
முன்னைய அரசின் கீழ் இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பல சிவில் அமைப்புக்கள் விசனம் தெரிவித்துவந்தன. இந்த சிவில் அமைப்புக்கள் முன் வைத்த விடயங்கள் சம்பந்தமாக முன்னைய அரசு எந்த வித அக்கறையையும் காட்டவில்லை.
இப்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமும் ஆணைக்குழுவின் விசாரணை செயல்பாட்டு கால எல்லையை நீடிப்பதற்கு முன் இந்த விடயங்களில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்பதையிட்டு சிவில் சமூகங்கள் பெருமளவில் விசனமடைந்துள்ளன.
இவ்வாறான நிலைமையின் கீழ் திருக்கோணமலையில் ஆணைக்குழுவின் அமர்வு நடைபெறுவதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நலன்புரி அமைப்புக்கள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் என்பன சந்திப்பை ஏற்படுத்தி ஆணைக்குழுவின் விசாரணைகளில் ( ஜனவரி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதலாவது அமர்வு முன்னெடுக்கப்பட்டது ) பங்கு பற்றுவதில்லை என தீர்மானம் மேற்கொண்டன.
இந்த முடிவானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் நீண்ட கலந்துரையாடலின் பின்பே எடுக்கப்பட்டது. இந்த இரண்டு அமைப்புக்களையும்.பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் சிவில் சமூக அமைப்பினால் ஊடகங்களில் அந்த தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கி பல விடயங்கள் வெளியிடப்பட்டன.
பெப்ரவரி 28 ம் திகதி தொடங்கி மார்ச் 03 ம் திகதி வரையிலான ( திருக்கோணமலையில் ஆணைக்குழு விசாரணைக்கான திகதிகள்) காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் 200 பேருக்கு மேற்பட்டோர் ஆணைக்குழு விசாரணை நடாத்திய நிலையங்களுக்கு முன்னாள் ஒன்று கூடி அவர்களின் ஆதங்கங்களை அமைதிவழி போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.
பெப்ரவரி மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆணைக்குழு விசாரணை நடைபெற்ற நிலையங்களில் முன்னைய காலங்களில் போலவே இலங்கை அரசின் புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி போராட்டக்காரர்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையின் முதல் நாளன்று எங்களின் போராட்டத்திற்கான காரணங்களை விளக்கியும் ஆணைக்குழுவினது கட்டமைப்புக்கள் சம்பந்தமாகவும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மன ஆதங்கங்களை விளக்கியும் திருகோணமலை, குச்சிவேலி முதலிய இடங்களில் நடைபெற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு விளக்கங்கள் கையளிக்கப்பட்டன.
திருகோணமலை கத்தோலிக்க ஆயரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆணைக் குழுவின் இறுதி நாள் அமர்வின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் பிரதிநிதிகள் ஆணைக் குழுவின் அங்கத்தவர்களை சந்தித்தனர். அந்த ஆணைக்குழுவிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து மனுவினை கையளித்தனர்.
மக்களால் முன் வைக்கப்பட்ட மன ஆதங்கங்களை செவிமடுத்த ஆணைக்குழுவானது இவ்விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு உரிய நபர்களோடு கூடி ஆராய்வதாக உறுதியளித்தது. இன்றைய திகதி வரை அவ்வாறான ஒன்று கூடல்கள் நடைபெறவில்லை.
கொழும்பிலுள்ள தனியார் ஊடகமொன்று பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியங்களை பதிவு செய்தாலே அன்றி அவர்களுக்காக ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் நலன்களை (பொருளாதார) அவர்கள் இழப்பார்கள் என ஆணைக் குழுவின் செயலாளர் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி வெளியிட்டிருந்த விடயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
இன்னும் ஒருசில நாட்களில் ஆணைக்குழுவானது தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் கையளிக்க உள்ளதாக அறியக்கிடைத்துள்ளதோடு அதன் பின், இந்த ஆணைக் குழுவானது தொடர்ந்தும் தனது செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
நாங்கள் இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் சகல விதங்களிலும் நம்பிக்கையை இழந்துள்ளோம் என்பதை தெரித்துக்கொள்வதோடு எந்த விதமான அடிப்படை திருத்தங்களுமின்றி இப்போதைய அரசும் முன்னைய அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்து செல்வதையிட்டு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம்.
என்பதையும் அறிவித்துக்கொள்கிறோம். தற்போதைய ஆட்சியில் செயல்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு முரணாக செயல்பாடுகளில் அக்கறை செலுத்துவதில், உள்ள முக்கிய குறைபாடுகளை இது வெளிக்காட்டுவதாய் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஐ.நா செயல் அணியின் அங்கத்தவர்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார் என அறியக் கிடைத்துள்ளது.
இந்த பயணம் விரைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட சகல அமைப்புக்களுடனும் தாராளமாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி அந்த ஐக்கிய நாட்டு செயல் அணியின் அங்கத்தவர்கள் நேரடியாக பேசுவதற்கும் அவர்களை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
எங்களின் காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு சர்வதேசத்தின் ஈடுபாட்டுடனான தலையீடுகளை வலியுறுத்துகிறோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls6C.html

Geen opmerkingen:

Een reactie posten