தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஐ.நா நிறுவனம்! கனடாவில் புதிய திருப்பம்!!

கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெகு விரைவில் மக்களுக்கு வழங்கப்படும்: பிரதமர்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:12.30 AM GMT ]
கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெகு விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கொள்ளையடித்தவர்களை தண்டிப்பதனை விடவும் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதன்மையானது.
இதன்மூலம் பொதுமக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அர்த்தப்படாது.
அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும்.
அதனை விரும்பாதவர்கள் இருந்தால் அவர்களை மறந்து விட்டு ஏனையவர்களை இணைத்துக் கொண்டு இந்தப் பயணம் தொடரப்படும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வழங்கிய மக்கள் ஆணை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது.
அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
சில அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்வதற்காக தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொட்டலங்க பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை நேற்று வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx5B.html


தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஐ.நா நிறுவனம்! கனடாவில் புதிய திருப்பம்!!
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:42.20 AM GMT ]
தமிழர்களின் முன்னெடுப்பான நிகழ்வுகள் இன்று கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கியநாடுகள் அவையின் அமைப்புக்கள் விரும்பம் தெரிவித்துள்ளன.
அதன் முன்மாதிரியான நிகழ்வாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் கனடாக் கிளை கனடிய மனிதவுரிமை மையத்துடன் [CHRV] இணைந்து 2015ல் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.
சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒன்றாரியோ சட்டசபையில் கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 22 அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும், 16ற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், பற்றிக் பிரவுன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் கனடியப் பாதுகாப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். அமெரிக்கத் தூதரகத்தின் சார்பில் அங்கு உயர் பணியாற்றும் தமிழரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
தமிழர்களின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையமானது [www.chrv.ca ] சர்வ இனங்களையும் மதங்களையும் உள்வாங்கிய நிகழ்வுகளை உள்வாங்கியதாக நடத்தி வருவதோடு, பல்லினக் கலாச்சாரத்தை கனடாவில் மேன்மைப்படுத்தும் அமைப்பாகவும் திகழந்து வருகின்றது.
சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட பல்லின அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கருத்தாலோனையின் படியும், கனடிய மனிதவுரிமை மையத்தின் நேர்மையான செயற்பாட்டின் வெளிப்பாடகவும் ஐக்கிய நாடுகளவையின் பெண்கள் அமைப்பின் கனடாக் கிளை இந்த அமைப்புடன் இணைந்து திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUmx5D.html

Geen opmerkingen:

Een reactie posten