தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

நாடாளுமன்றம் சென்ற மோடி: வெளியேறிய விமல்



இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் தவறு நிகழ்ந்துள்ளது!
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 10:07.48 AM GMT ]
இலங்கைக்கு நேற்று வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பாரிய தவறு நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹொட்டலில் இந்த தவறு ஏற்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், சற்று ஓய்வெடுப்பதற்காக ஹொட்டலுக்கு சென்று நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத அரபு பிரஜை ஒருவர், பிரதமரை நோக்கி வந்து தழுவிக்கொண்டுள்ளார்.
மிக முக்கிய பிரமுகர் ஒருவரை முன்பின் தெரியாத ஒருவர் வந்து தழுவிக் கொள்வது பாரிய பாதுகாப்பு தவறாகும்.
இதனையடுத்து சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டதுடன் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அத்துடன் ஏற்பாடுகளில் நிகழ்ந்த தவறு குறித்தும் விசேட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6A.html

நாடாளுமன்றம் சென்ற மோடி: வெளியேறிய விமல்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 10:21.37 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற சந்தர்பத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விமலிடம் வினவிய போது அதற்கு பதிலளித்த விமல், தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்து 13ஆம் அரசியல் அமைப்புக்கு அப்பால் செல்லுங்கள் என தெரிவிப்பாரானால் அவ்வாறானதொரு அரசியல் தலைவரின் போதனைகளை செவி மடுக்கவேண்டிய அவசியம் எனகில்லை, அதனாலேயே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றேன்.
இவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு அரச தலைவர் ஒருவருக்கு எவ்வித உரிமையும் கிடையாதென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw6B.html

Geen opmerkingen:

Een reactie posten