யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலி செய்து, வாசகங்கள் எழுதப்பட்ட உருவப் பொம்மைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் சுமந்திரன் எம்.பியின் அலுவலகமென திறக்கப்பட்ட தமிழரசுக்கட்சி அலுவலகம், கைதடியிலுள்ள வடமாகாண சபை வளாகம், யாழ்.நகரில் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகம் ஆகிய இடங்களிலேயே உருவப் பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
இதேவேளை வடமராட்சி, பருத்தித்துறை சிவன் கோவிலில் இன்று கூட்டம் ஒன்றை நடத்த சுமந்திரன் திட்டமிட்டிருந்தார் என்றும், இதனையடுத்தே இவ்வாறு உருவப் பொம்மைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசம்பவம் குறித்து தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் யாழ்.மாவட்ட தலைவர் கருத்துத் தெரிவித்தபோது,
தமிழரசுக் கட்சிக்கே இளைஞர் அணி உள்ளது. கூட்டமைப்பு இளைஞர் அணி என்று குறிப்பிட்டே உருவப் பொம்மைகளில் சுலோகங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி ஓர் அணி இருப்பது இன்றுவரை தனக்கு தெரியாது எனக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp1H.html
Geen opmerkingen:
Een reactie posten