தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

பிரதமர் ரணிலுக்கு சுஷ்மா பதிலடி

12 வருடங்கள் சவூதியில் அடிமையாக இருந்த பெண்ணை மீட்ட அதிகாரிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 02:28.27 PM GMT ]
12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய நடமாடும் சேவையின் போது அனுராதபுரத்தை சேர்ந்த இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கு புதிய கடவூச்சீட்டு ஒன்றை பெறுவதற்காக பெண்ணின் எஜமான் என கூறப்படும் நபர் தனது மனைவியுடன் பெண்ணை அழைத்து வந்திருந்தார்.
இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நல அதிகாரி ரொஷான் குணவர்தன, பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் 12 வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக இருப்பதும் 11 வருடங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
12 வருடங்களாக இலங்கைக்கு செல்லாத இந்த பெண் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும் தனக்கு இந்த நபர்களுடன் செல்ல முடியாது எனவும் இலங்கை பெண், தொழிலாளர் நல அதிகாரியிடம் கூறியுள்ளார்.
அத்துடன் எப்படியாவது தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார். இந்த பெண் சிங்கள மொழியை கூட சரியாக பேச முடியாதவராக காணப்பட்டுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட தூதரக அதிகாரிகளான அஹமட் நுஷ்ரத் மற்றும் யசீர் ஆகியோர் தந்திரமான முறையில் சிரிய பிரஜையான பெண்ணின் எஜமானிடம் சகல தகவல்களையும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் பெற்றுக்கொண்டனர்.
இந்த சாட்சியங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சட்டரீதியான நிலைமை மற்றும் பாரதூரம் குறித்து தெளிவுபடுத்தியதுடன், 11 வருட சம்பளமாக குறைந்தது 80 ஆயிரம் சவூதி ரியால்களை பெண்ணுக்கு செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
பணத்தை கொடுக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதும் பணத்தை வழங்கி பெண்ணை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக குறித்த நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
தொழிலாளர் நல அதிகாரியான ரொஷான் அவரின் யோசனைக்கு இணங்கவில்லை. பெண்ணை உடனடியாக தூதரகத்தின் பொறுப்பில் எடுத்துக்கொண்ட அவர், ரியாத்தில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எஜமானை விடுத்துள்ளார்.
இந்த பெண் பற்றிய எந்த தகவல்களும் தூதரகத்தில் இருக்கவில்லை என தொழிலாளர் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணின் உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சில முறைப்பாடுகளையும் செய்திருந்தனர். இவற்றையும் அதிகாரிகள் சவூதி நபரிடம் காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms3H.html


பிரதமர் ரணிலுக்கு சுஷ்மா பதிலடி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 02:12.57 PM GMT ]
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால் அவர்களை சுடுவோம் என கூறிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன் இதை ஒப்பிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் ஏன் வருகின்றனர். இந்திய மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கட்டும். ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால், நான் அவரை சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது. நாங்கள் உங்கள் மீனவர்கள் மீது பெருந்தன்மை காட்ட வேண்டும் என்றால், நீங்கள் அதே பெருந்தன்மையை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீது காட்டியிருக்க வேண்டும் இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலர் அக்பருதீன் கூறியதாவது,
இலங்கை பிரதமரிடம் இந்திய மீனவர் பிரச்சினையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்றும், இது, அவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்றும் அமைச்சர் சுஷ்மா கூறினார்.
மேலும், இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன், இந்திய மீனவர் பிரச்னையை ஒப்பிடக் கூடாது என்றும், இந்த இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறு விதமானவை என்றும், அவரிடம் விளக்கினார்.
மீனவர் பிரச்சினையில் உள்ள சிக்கல்களையும், கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை மூலமே சுமுகமாக தீர்க்க முடியும் என்றும் சுஷ்மா வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும், 13 மற்றும் 14ம் திகதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மோடியின் இந்த சுற்றுப் பயணம், இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms3G.html

Geen opmerkingen:

Een reactie posten