தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 mei 2014

இவரெல்லாம் உறுப்பினராக இருக்கும்போது தமிழருக்கு பாஜக ஆப்பு வைக்காமலா இருக்கும்!!

இலங்கையுடன் நெருக்கமான உறவு அவசியம் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி
[ புதன்கிழமை, 21 மே 2014, 02:17.54 PM GMT ]
இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ரயில் நிலைய குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.
இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்து விட்டிருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZms6.html

Geen opmerkingen:

Een reactie posten