மட்டு TNA கூட்டத்தில் கருணா – பிள்ளையானின் சகாக்கள்! சிக்கியது ஆதாரம்
முதலில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியலிட்டவர்களைப் பற்றிப் பார்த்தால் தமிழ் இனத்தை சிதைக்க அயராது பாடு பட்ட களுதாவளை குணம் வீ.ஆ எனப்படும் படுவான்கரை மகேந்திரன் அவர்கள் யார் குணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மகிந்தருக்கு வக்காளத்து வாங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனக் குறைப்பிற்கு அயராது பாடு பட்டு முஸ்லிம்களை பாராளுமன்ற உறுப்பினராக அயராது பாடுபட்ட நிலையில் கடந்த மாகாண சபையில் கூட்டமைப்பில் இவரை யார் என்று மக்கள் வாக்களிப்பது
வீ.ஆர் இவரின் பின்புலம் என்ன பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்த போராதீவு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபையில் தவிசாளராக இருந்ததுடன் பிள்ளையானின் அடாவடித் தனம் அனைத்தையும் ஆதரித்து பல வீட்டின் கண்ணீருக்கு காரணமானவர் இதுவரை இவர் செய்தது தான் என்ன வெளிநாட்டில் உள்ள ஒரு தமிழனை ஏமாற்றி இன்று ஒரு பதவியில் கௌரவக் கொள்ளை
இவ் இருவரம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நிலையில் பரிந்ததை சரி என வாதிட்டு பிரிந்ததற்கு பாமர மக்கள் மத்தியில் மூளைச் சலவையில் ஈடுபட்டனர் அதற்குக் கூட தக்க ஆதாரம் உண்டு அதனை மறுப்பார்களா இன்று வட-கிழக்கு இணைந்தது தமிழரின் தாயகம் என மக்களிடம் விபச்சார அரசியல் இவர்களை மக்கள் ஆதரிப்பது நல்லதா அல்லது நிராகரிப்பது நல்லதா வாசிப்பவர்கள் புரிவார்கள்
மாகாண சபை வெற்றியடையாமைக்கு பல விமர்சனம் இருந்தாலும் பிள்ளையானை வெற்றி அடைவதற்கு அரசு சூழ்ச்சி செய்ததாக கூறினாலும் கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பதில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வெற்றி மிக பிரதானமானதாக அவதானிக்கப் பட்ட நிலையில் அதனைத் தலை கீழாக்கியது தமிழரசுக் கட்சியின் இப்படிப்பட்ட தலைகீழான வேட்பாளர் நியமனம் இந்த தோல்வியில் ஆரையம்பதியில் வேட்பாளராக நின்ற மூன்று மனைவியர்களை கொலை செய்த மது வியாபாரியும் இப்படிப்பட்ட தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டவர்களை வேட்பாளராக நியமித்த வேளையில் எத்தனை தகுதியானவர்களை தமிழரசுக் கட்சி நீக்கியது ஒரு சிலர் வேட்பாளராக வந்தனர் பின்னர் நீங்கினர் எனலாம் மிகுதி அரைவாப் பேர் திட்டமிட்டு தமிழரசுக் கட்சியால் பழி வாங்கப் பட்டனர்
மேற் கூறிப்பிட்ட விடயம் எதுவும் பிளை இருந்தால் திறமையான மட்டு தமிழரசுக் கட்சி என்றால் மறுக்க முடியுமா இல்லை இவர்களை நியமித்தவர்களும் தமது எதிர் கால சுய நலத்துக்கா செய்தமை நரூபனம் மறுக்க முடியுமா ஆதாரத்துடன் மறுத்தால் நல்லது.
கிறிஸ்தன் ஆசிரியர் யார் இவரின் பின் புலம் என்ன வாகரையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்ப கால தீவிர புலிகள் ஆதரவாளன் அது பின்னர் படுவாங்கரை அரசியல் துறை அலுவலகத்தில் வைத்து புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் கரிகாலனால் அடித்து துரத்தப்பட்டவர் காரணம் என்ன வென்று செல்வதற்கில்லை பின்னர் சாதாரணமாக இருந்தவர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானயாவில் புகளிடம் கேட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை வந்தார்
இவர்களின் குடும்பம் தமிழ் இன உணர்வாளராக நடித்து தமிழனை விற்றுப் பிளைத்தது தான் மிச்சம் இவரின் சகோதரனின் மகன் ஒருவர் பிள்ளையான் கருணாவின் இனைப்பாளராக் இருந்து பல மில்லியன் செத்துக்களை சூரையாடி தனது குடும்பத்தில் பலருக்கு அரச நியமனம் பெற்றுக் கொடுத்து விட்டு பல மக்களின் கண்ணீருடன் விளையாடிய இவ்வாரானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மீண்டும் அரசியலில் உள் நுளைந்து மிஞ்சியுள்ள தமிழ் இனத்தையும் அழிக்க தயார் படுத்துவதற்கான மாமா வேலைகளில் கிறிஸ்தன் வாத்தி எதிர் வரும் காலங்களில் பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற சூழ் நிலை உள்ள நிலையில் அதற்காக சில கருணா பிள்ளையான் சகாக்கள் உள் நுளைந்தனர்.
இது போன்று பலரின் விபரங்கள் மற்றும் பகலில் தாயகம் தேசியம் கதைக்கும் மட்டக்களப்பின் தமிழ் அரசியல் வாதிகள் அரவு வேளையில் கருணா பிள்ளையானுடன் கதைத்துக் கலக்கும் காட்சிகளும் ஆதாரத்துடன் விரைவில் வரும் என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறோம்.
அது மட்டுமல்லாது மேற்குறிப்பிட்வர்களை வேட்பாளராக நிறுத்தி பெறும் வெற்றியை விட அத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகுவது சாலச் சிறந்தது மக்கள் பவம்



http://www.jvpnews.com/srilanka/71463.html
கல்முனை பிரதேச செயலாளராக சிங்களவர் நியமனம்
இவர் மகாஓயா பிரதேச செயலாளராகக் கடமையாறிய நிலையில் கல்முனைப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுல்படுத்தப்படும் வகையில் பொது நிருவாக உள்ளாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவினில் வசிப்பவர்களில் 99 வீதத்துக்கும் அதிகமானோர் தமிழ் பேசும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எம்.எம்.எம். நௌபல் என்பவர் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து- அங்கு – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா என்பவர் பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தார்.
இந்த நிலையிலேயே மொகான் விக்ரம ஆராச்சி கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71443.html
Geen opmerkingen:
Een reactie posten