தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது!– கோத்தபாய!

சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிக்க முயற்சி? – ஆங்கில ஊடகம்
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 12:52.58 AM GMT ]
சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
திருகோணமலை - மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொது மக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்காமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தடையாக இருந்து வருகின்றனர்.
அங்கு மொத்தமாக 9000 ஏக்கர் காணிப் பரப்பு இருந்த போதும், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் படி,  1458 ஏக்கர் காணிப்பரப்பே சம்பூருக்கு சொந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அனல் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள 500 ஏக்கர் காணிப்பரப்பும் உள்ளடங்கும்.
ஏனைய பிரதேசங்கள் முழுவதையும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கம் சம்பூர் என்ற கிராமம் ஒன்று இருந்ததாக சான்றுகள் இல்லை என்பதற்காக சகல ஆவணங்களையும் அழித்துவிடத் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlt3.html


பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது!– கோத்தபாய
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 01:03.55 AM GMT ]
பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க பௌத்த பிக்குகளின் ஆலோசனை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம்.
30 ஆண்டுகளான நீடித்த போரின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்.
இன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருகின்றனர்.
குறித்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவி சிங்கள மக்களை விரட்டியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை பௌத்த பிக்குகள் தடுத்துள்ளனர்.
நாட்டில் விஹாரைகள் இருந்திருக்காவிட்டால் பௌத்த உரிமைகளை பாதுகாத்திருக்க முடியாது. பௌத்த மத உரிமைகளை உறுதி செய்ய பிக்குகள் வழங்கி வரும் ஆதரவு அளப்பரியது.
மஹா சங்கத்தினரை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மருதானை ராஜசேகரராமயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlt4.html

Geen opmerkingen:

Een reactie posten