தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 mei 2014

பதவியேற்பு விழாவில் மகிந்த பங்கேற்பது உறுதி! மோடியுடன் தனியாகவும் சந்திப்பு

தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது பாஜக
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2014, 12:52.58 AM GMT ]
பாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக நேற்று வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.
இது குறித்து டில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில்,
மோடி பிரதமராக பதவியேற்க உள்ள விழா, ஜனநாயகத்தின் மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக நடைபெறுகிறது.
அந்த விழாவில் பங்கேற்பதற்காகதான் அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவொரு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியாகும். அண்டை நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த வேண்டுமென்றதற்காக அந்நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த அடிப்படையில்தான் ராஜபக்சவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இதை தமிழக கட்சிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அண்டை நாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை கடைப்பிடித்து வந்தார். அதை தற்போது மோடி பின்பற்றுகிறார் என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில்,
நாட்டின் நலன் கருதி அண்டை நாடுகளின் நல்லுறவை இந்தியா வளர்த்து வருகிறது. அதனால்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை
http://www.tamilwin.com/show-RUmsyFRXLZlp3.html
பதவியேற்பு விழாவில் மகிந்த பங்கேற்பது உறுதி! மோடியுடன் தனியாகவும் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2014, 02:24.19 AM GMT ]
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வரும் 26ம் திகதி நடக்கவுள்ள நிகழ்வில் மகிந்த ராஜபக்ச தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இந்த அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை.
அதேவேளை  இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.
பதவியேற்புக்கு மறுநாளான, வரும் 27ம் திகதி செவ்வாயக்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFRXLZlq1.html

Geen opmerkingen:

Een reactie posten