தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 mei 2014

முல்லைத்தீவுக் கடலில் கைதான 54 பேரும் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

தங்கச் சங்கிலி அபகரித்த இளைஞர்களை பிடிக்க உதவிய வயோதிபரின் துணிச்சல்!
[ சனிக்கிழமை, 03 மே 2014, 05:21.49 AM GMT ]
வீதியால் சென்ற பெண்­ணி­ட­மி­ருந்து தங்கச் சங்­கி­லியை அறுத்­துக்­கொண்டு தப்­பி­யோட முற்­பட்ட இளைஞன் வயோ­தி­பரின் துணிச்­ச­லான செயற்­பாட்­டினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
இச்­சம்­பவம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முற்­பகல் 11 மணி­ய­ளவில் யாழ். அரி­யாலைப் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
யாழ். அரி­யாலை ஆசீர்­வா­தப்பர் வீதியால் உற­வினர் வீட்­டிற்குச் சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­ட­மி­ருந்து தங்கச் சங்­கி­லியை அப­க­ரித்­துக்­ கொண்டு இரு இளை­ஞர்கள் மோட்டார் சைக்­கிளில் தப்­பி­யோ­டி­யுள்­ளனர். இதன் பொழுது அப்பெண் கூக்­கு­ர­லிட்டுக் கத்­தி­யுள்ளார்.
அப்­பொ­ழுது வீட்­டுக்கு வெளியில் வெயிலின் கொடுமை தாங்க முடி­யாத நிலையில் கதி­ரையில் அமர்ந்­தி­ருந்த வயோ­திபர் ஒருவர், தான் அமர்ந்­தி­ருந்த கதி­ரையை கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்­கிளை நோக்கி வீசி எறிந்­துள்ளார்.
அதனால் மோட்டார் சைக்­கிளில் சென்ற இளை­ஞர்கள் நிலை­த­டு­மாறி நிலத்தில் விழுந்­துள்­ளனர்.
இதன்­பொ­ழுது ஒரு இளை­ஞனை அப்­ப­கு­தியில் ஒன்று கூடிய மக்கள் பிடித்­துள்­ளனர்.
மற்­றைய இளைஞர் தப்­பி­யோ­டி­யுள்ளார். அவ்­வாறு தப்­பி­யோ­டிய இளை­ஞ­னையும் நாயன்­மார்­கட்டுப் பகு­தியில் இளை­ஞர்கள் பிடித்­துள்­ளார்கள்.
பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட சங்கிலியும் அவர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது.
இந்த இரு இளை­ஞர்­களும் முல்லைத்தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு பிரதேசத்தில் உள்ள கைவேலிப் பகுதியைச் சேர்ந்த 18, 19 வயதுடைய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmu0.html

முல்லைத்தீவுக் கடலில் கைதான 54 பேரும் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
[ சனிக்கிழமை, 03 மே 2014, 05:05.52 AM GMT ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54 பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போது அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றது கண்டுபிடிக்கப்படது. அதனைத் தொடர்ந்து குறித்த 54 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் திருகோணமலையில் வைத்து மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கடைசியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி காலிக் கடலில் வைத்து 70 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்குப் பிறகு இதுவே கைப்பற்றப்பட்ட படகு என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmuz.html

Geen opmerkingen:

Een reactie posten