தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 mei 2014

நான்கு பலஸ்தீனியர்கள் இலங்கையில் போராட்டம் [ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 03:49.17 PM GMT ]


நான்கு பலஸ்தீனப் பிரஜைகள் நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவிலிருந்து இலங்கைக்குப் புகலிடம் கோரி வந்த நான்கு பலஸ்தீனப் பிரஜைகளை நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.
அல்ஜசீரா தொலைக்காட்சியின் பாலஸ்தீனிய மனித உரிமைகளுக்கான குழுவின் கருத்துப்படி,
கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி சர்வதேச விமாந நிலையத்தில் வைத்து போலி கடவூச்சீட்டுடன் குறித்த நான்கு பலஸ்தீனர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தங்களை நாடு கடத்த வேண்டாம் என குறித்த பலஸ்தீனப் பிரஜைகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பலஸ்தீனர்களை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை அதிகாரிகள் நடத்தி வருவதாகவும், நெருக்குதல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அல்ஜசீரா சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடாக சுவீடன் செல்லவே இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் முயற்சித்துள்ளனர். எனினும், இலங்கை அதிகாரிகள் அவர்களை சிரியாவிற்கோ அல்லது லெபனானிற்கோ நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFSVLYho2.html

Geen opmerkingen:

Een reactie posten