தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த ஜீ.எல்.பீரிஸ்!

இலங்கை ஜனாதிபதியின் பதிலில் திருப்தியில்லை: விஜய் ஜொலி
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 01:02.38 PM GMT ]
வடமாகாண பிரதம செயலாளர் தொடர்பில் தாம் தொடுத்த வினாவுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய பதில் தமக்கு திருப்தி தரவில்லை என்று பாரதீய ஜனதாக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான விஜய் ஜொலி தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஜொலி ஆகியோர் நாட்டுக்கு திரும்பும் முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளரான தமது செயலாளர் தொடர்பில் அதிகாரம் இல்லாத போது வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படுவார் என்று ஜொலி ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, செயலாளர் பல வருடங்களாக அந்த பதவியை வகித்து வருகிறார்.
இந்தநிலையில் அவர்கள் செயலாளரின் அதிகாரங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஜொலி மாகாண செயலாளர், ஆளுநருக்கு கீழ் வருவதை ஏற்றுக்கொண்டாலும் அவர் மீது முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையெனில் அவரின் பதவியில் அர்த்தமில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முரளிதரராவும் ஜொலியும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வைக் காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVity.html

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த ஜீ.எல்.பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 12:59.35 PM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பது தெடர்பான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புகள் குறித்து அமைச்சர், ஆணையாளருக்கு விபரமாக விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis7.html

Geen opmerkingen:

Een reactie posten