[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 04:08.47 AM GMT ]
1977 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் தமிழர் மீதான வன்முறைகளால் அகதிகள் ஆக்கப்பட்டு வடக்கிற்கு துரத்தப்பட்டவர்களில் கணிசமான மக்களும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மக்களும் குடியேறி கடந்த 35 வருடங்களாக கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினரிடம் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அப்பகுதிக்கு பிரதே சபை உறுப்பினர் சி.சுப்பையா, பாலாசிங்கசேதுபதி, பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன், இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினருடன் விஜயம் செய்திருந்தனர்.
இந்தக்கலந்துரையாடலில், ஊற்றுப்புலம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் யோகன், ஊற்றுப்புலம் கிராமத்தின் மூத்த குடிமகனும் முன்னாள் கி.அபிவிருத்தி சங்க தலைவருமான சி.சின்னையா, கட்சியின் ஊற்றுப்புலம் செயற்பட்டாளர் வடிவேல் முதியோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்கள் வெளியிட்டனர்.
அதன்படி ஊற்றுப்புலம் கிரராமத்தின் பின்புறமாக கிருஸ்ணபுரம், மலையாளபுரம் போன்ற கிராமங்களையும் இணைக்கும் எல்லைப் பகுதியாக இருக்கக்கூடியதும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கும் பிரதான பாதையாகவும் இருக்கக்கூடிய பகுதியில் மிகவும் ஆபத்தான பாலம் ஒன்று மக்களின் ஆபத்தான பாவனையில் காணப்படுகின்றது.
பாடசாலை சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு தடவை உரிய அதிகாரிகள் தரப்புக்களிடம் முறையிட்டபோதும் பலகாலமாக இந்த நிலையிலேயே பயணிக்க வேண்டியிருப்பதாகவும் மழைகாலத்தில் ஆறு பெருக்கெடுத்தும்போது இந்த பாலம் இன்னும் மிகவும் ஆபத்தானது என ஊற்றுப்புலம் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer0.html
இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க நடவடிக்கை: இந்தியா
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:09.14 AM GMT ]
ஆந்திராவின் பிரகாசம் என்னும் கரையோரப் பரப்பை பயன்படுத்தி இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சிக்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு அதிகளவான கரையோர பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்,கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையிலிருந்து அகதிக் கோரிக்கையாளர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்தே அதிகளவான இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் காரணமாக பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer1.html
Geen opmerkingen:
Een reactie posten