தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

கோத்தபாயவை சந்திக்கப் போவதில்லை?: த.தே.கூட்டமைப்பு!

பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:09.06 AM GMT ]
இலங்கையர்கள் 10 பேர் பிரித்தானிய இராணுவத்தில் சேவையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த பிரித்தானிய பாதுகாப்பு பிரதியமைச்சர் அனா சௌபரி இந்த தகவலை வெளியிட்டார்.
எனினும் இந்த பத்துப் பேரும் எந்த காலப் பகுதியில் சேவையாற்றினர் என்ற தகவல் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw2.html
நோட்டன் பிரிட்ஜில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:17.46 AM GMT ]
நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்றிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார்.
வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து, அச்சிறுமியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் அச்சிறுமி கிடைக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 8 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர மஹா வித்தியாலயத்தில் ஔிந்திருந்த நிலையில் இவர் மீட்ககப்பட்டுள்ளார்.
பொலிஸாரும் பிரதேச மக்களும் மேற்கொண்ட தேடுதலின் போது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் தனது மாமியிடம் வளர்ந்த குறித்த சிறுமி, அதிக குழப்படியானவர் எனவும் இதனால் மாமி கடிந்து கொண்டதை அடுத்து பாடசாலையில் மறைந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw3.html

கோத்தபாயவை சந்திக்கப் போவதில்லை?: த.தே.கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:26.34 AM GMT ]
வடமாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம், தாம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து இது தொடர்பில் கருத்துரைத்திருந்த விக்னேஸ்வரன், தமக்கு இது தொடர்பில் நேரடியான அழைப்பு வரவில்லை. அத்துடன் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டால் அது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று சிங்கள பத்திரிகையொன்றில், கோத்தபாயவை சந்திக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக கட்சி தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw4.html

Geen opmerkingen:

Een reactie posten