தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

விசாரணைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் ஐ.நாவால் தடைகொண்டுவர முடியும்: பதறும் ஸ்ரீலங்கா !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்க்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கை ஒத்துழைப்பை வழங்காவிட்டால் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என எச்சரித்துள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மறுத்துவருவதை கண்டிக்குமாறு பிரிட்டனை கேட்டுக்கொண்டுள்ள அக்குழுவினர் இலங்கையை இணங்கச் செய்வதற்காக தடைகள் உட்பட அனைத்து சாத்தியக் கூறுகளையும் பரிசீலிக்குமாறும் கோரியுள்ளது.
மார்ச் மாதம் நிறைவேட்டப்பட்ட தீர்மானத்தின் பின்னரும் இலங்கை அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்காமல் அதனை தவிர்க்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரான கொன்சவேர்டிவ் கட்சியின் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றுள்ள அக்குழுவினர் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஐ.நாவிசாரணைகளில் சாட்சியமளிக்க கூடியவர்களை நாடுகடத்துவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/986.html

Geen opmerkingen:

Een reactie posten