தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

தமிழர்கள் விடையத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அன் நாட்டு நீதிமன்றம் அடித்த ஆப்பு !

கொலை வழக்கில் சிக்கியுள்ள டக்ளஸ் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றில் தோன்றலாம் !

[ Sep 11, 2014 07:38:53 PM | வாசித்தோர் : 3450 ]
இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக வழக்கில் ஆஜராக முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.1986ம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமொன்று தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது, வழக்கு விசாரணைகளில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு இந்திய உயர் நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், இந்த அழைப்பாணை உத்தரவுகளைநீதவான் செல்வம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளில் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆஜராக முடியும் என நீதவான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் தேவானந்தா எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
http://www.athirvu.com/newsdetail/979.html

தமிழர்கள் விடையத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அன் நாட்டு நீதிமன்றம் அடித்த ஆப்பு !

[ Sep 11, 2014 07:48:00 PM | வாசித்தோர் : 11595 ]
குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற்க்கும், அல்லது திருப்பி அனுப்புவதற்க்கும் மாத்திரமே அரசாங்கம் குடியேற்றவாசிகளை தடுத்துவைத்திருக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் விடயத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரலாம் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 2013 யூலை மாதத்திற்க்கு முன்னர் வந்தவர்களை தடுத்து வைப்பது தற்போது சட்டவிரோதமாகியுள்ளது. அவர்களை அரசாங்கம் தற்போது விடுவிக்கவேண்டும் அல்லது அவர்களின் அகதிஅந்தஸ்த்து கோரிக்கையை பரிசிலிக்க வேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/980.html

Geen opmerkingen:

Een reactie posten