தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் போர்க்கொடி!

அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு ஓராண்டுக்கு வரையறை
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 11:58.20 PM GMT ]
அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு ஓராண்டுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் காணப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், அரச சார்பற்ற நிறுவனமொன்று ஒரு தடவை பதிவு செய்து கொண்டால் அதனை வாழ் நாள் முழுவதற்கும் பயன்படுத்த முடியும்.
எனினும் எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுட் காலத்திற்கான அனுமதி அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது.
மேலும், மூன்று வாரத்திற்கு ஒரு தடவை நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சிற்கு கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அரச சார்பற்ற நிறுவன செயலகத்தில் பதிவுசெய்து கொள்ளாத நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr7.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் நாடு பிளவடைந்திருக்கும்!
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 12:28.36 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் நாடு பிளவடைந்திருக்கும் என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்காவிட்டால் நாடு இரண்டாகியிருக்கும்.
இன்று உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தடுக்கும் நோக்கிலேயே நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிழையான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
அரசாங்கம் தரகுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதாகவும், அபிவிருத்தித் திட்டங்களில் பயனில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதே ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது.
எந்தநேரத்தில் எந்தஇடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் நிலவிய காலத்தை ஜனாதிபதியே மாற்றியமைத்தார் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டே பகுதியில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs0.html
பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் போர்க்கொடி!
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 01:01.11 AM GMT ]
பாதுகாப்புப் படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு படைப் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கான விடுதி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டிருந்தது.
எனினும்ää பயிலுனர்கள் தங்குவதற்கு விடுதி அமைப்பதற்காக பாரியளவில் பணம் செலவிடப்படுவதனை அமைச்சர்கள் சிலர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொம்பனித்தெருவில் இயங்கி வரும் பாதுகாப்புப் படைப் பயிற்சி மையமொன்றின் மாணவர்கள் தங்குவதற்காக 600 மில்லியன் ரூபா செலவில் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகளினால் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் சில கஸ்டப் பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில பாடசாலைகளில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பாடசாலைகள், இராணுவப் பல்கலைக்கழகங்கள் அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரிக்கக் கூடுமெனவும் இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் 600 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியதில்லை எனவும், 448 மில்லியன் ரூபாவில் நிர்மானப் பணிகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இராணுவப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விடுதியமைக்க பாரியளவில் பணம் செலவிட வேண்டியதில்லை என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs2.html

Geen opmerkingen:

Een reactie posten