அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் மகஜர் ஒன்று கையளிக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யசூசி அகாசி யாழ்ப்பாணம் செல்வதற்கு கோரியபோதும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அனாலும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிப்பதாகவும் கூறப்படுகின்றது.
2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது அன்றில் இருந்து யசூசி அகாசி ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். இது அவரது இலங்கைக்கான 24 ஆவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/940.html
Geen opmerkingen:
Een reactie posten