தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

கடத்தப்பட்ட சிறுமியின் முடி வெட்டப்பட்டுள்ளது- பிரதான சந்தேகநபர் கைது!



இந்திய இராணுவ அதிகாரிகளை புகைப்படம் எடுத்த இலங்கை உளவாளி! திடுக்கிடும் தகவல் - தென்னிந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 03:16.28 AM GMT ]
தென்னிந்தியாவில், உளவுப்பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அருண் செல்வராஜா, இராணுவ உயரதிகாரிகளை படம் எடுத்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்காக உளவுப்பணியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட அருண், தற்போது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அருண் 2009 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இரவுநேர போசனத்தின் போது உணவு பரிமாறுபவராக செயற்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சென்னையில் உள்ள முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு இராணுவ கல்லூரியின் இராணுவ அதிகாரிகளுக்கான இரவுபோசனத்துக்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது.
இதன்போது குறித்த ஹோட்டலில் உள்ள தமது நண்பரின் ஊடாக அருண் செல்வராஜா, இராணுவ அதிகாரிகளுக்கான இரவுபோசன விருந்தின்போது உணவு பரிமாறுபராக செயற்பட்டுள்ளார்.
இந்தவேளையில் அவர் இராணுவ அதிகாரிகளுக்கு பானம் பரிமாறும் போது அருண், தாம் வைத்திருந்த பேனைக் கமராவினால் அதிகாரிகள் பலரை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் பின்னர் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றும் தமது அதிகாரியான சாஜி என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இராப்போசன விருந்து இரவின்போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அருண் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
இதேவேளை அருண் செல்வராஜாவின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் கைது: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை
சென்னையில் இலங்கையரான அருண் செல்வராஜா என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து,  மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விமான நிலைய பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில் செல்லும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, நேற்று காலை சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 40) என்பவர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தபோது, அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அதில் ஒரு போத்தலில் “பாதரசம்” இருந்ததையடுத்து, அதனை எடுத்துச் செல்ல தடை அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதரசம் விலை உயர்ந்தது என்பதால் அதை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என விக்னேஷ் கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டதால் அவர், தனது விமான பயணத்தை இரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
மேலும் பயணிகள் கொண்டு சென்ற தங்கள் கைப்பைகளில் இருந்த திரவ பொருட்களை எடுத்துச் செல்லவும் அதிகாரிகள் தடை விதித்தனர். பயணிகள் கொண்டு வந்த திரவ பொருட்களை வீசி எறிந்து விட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்: அருண் செல்வராஜா இந்திய உளவு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்
தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தென்னிந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக இலங்கை தமிழரான அருண் செல்வராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காக முக்கிய மையங்கள் யாவற்றிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மின்சார மையங்கள், பாதுகாப்பு மையங்கள், முக்கிய ரயில்வே நிலையங்கள், வர்த்தக வீதிகள், புனித தலங்கள், கரையோர காவல் நிலையங்கள் என பல இடங்களிலும் இந்த பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கரையோர இறங்கு தளங்களான தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மேலதிக படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை விசாரணை செய்யப்பட்டு வரும் அருண் செல்வராஜா, விரைவில் இந்திய உளவு வலைத்தள பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr7.html
கடத்தப்பட்ட சிறுமியின் முடி வெட்டப்பட்டுள்ளது- பிரதான சந்தேகநபர் கைது
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:42.57 AM GMT ]
குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த 9ம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேஷானி பண்டார என்ற சிறுமி இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பினை அடுத்து பொலிஸார், குறித்த சிறுமியை குருநாகல் நெரியாவ பிரதேசத்தில் மீட்டுள்ளனர்.
மேலும் சிறுமியை அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நெரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டில் இருந்த தாய் ஒருவர் மற்றும் சந்தேகநபரின் சகோதரி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாய் 60 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, சிறுமி கடத்தப்பட்ட குருநாகல் - வெல்லவ பகுதி வீட்டுக்கும், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த நெரியாவ பிரதேச வீட்டுக்கும் சுமார் 7 கிலோ மீற்றருக்கும் குறைவான வித்தியாசமே காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் திருமணமானவர் எனவும் அவரது மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குழந்தை, வீடொன்றின் அறையில் மர பலகைகளுக்கு இடையில் இருந்ததாகவும், அவருடைய தலைமுடி சிறிது வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபரின் உறவினரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் இவ்வாறான சந்தேகமொன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
சிறுமி கடத்திச் செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குவேனிகல ( குவேனி பாறை) அருகில் புதையல் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
இளவரசர் விஜயன், குவேனி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை விரட்டிய பின், குவேனி அழுது புலம்பியவாறு குருநாகல் பகுதிக்கு வந்தாகவும் அவர் பாறை ஒன்றின் மீது ஏறி விஜயனுக்கு சாபமிட்டதாகவும் அந்த பாறையே குவேனிகல என அழைக்கப்படுவதாகவும் மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது.
குவேனிகல என்ற குவேனிபாறை குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ளது.
இவ்வாறான நிலையில், குறித்த சிறுமி புதையல் எடுப்பதற்கு பலி கொடுப்பதற்காக கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது என அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் கைது
குருநாகல் கனேவத்த பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் நேற்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நான்கரை வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் நேற்று பிரதேசத்தின் ஒரு இடத்தில் கைவிடப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டார்.
இதனையடுத்து பெண் ஒருவர் உட்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையிலேயே இன்று பிற்பகல் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவரின் தகவல் மற்றும் சிறுமியை கடத்தியமைக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவரவில்லை.
இதேவேளை குறித்த சிறுமி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று மருத்துவ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft1.html

Geen opmerkingen:

Een reactie posten