தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக முதல்வர் அவதூறு வழக்கு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், ஜனதாக்கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக இன்று  அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தாம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாக அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த தகவல் மூலம் சுப்பிரமணியன் சுவாமி அவதூறை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு வந்து சுப்பிரமணியன் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhry.html

Geen opmerkingen:

Een reactie posten