இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிவந்த மரப் படகு ஒன்று, மேற்கு அவுஸ்திரேலிய அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி, இலங்கை அகதிகள் 66 பேரை ஏற்றிக்கொண்டு இந்த படகு, வடக்கு பேர்த்தை வந்தடைந்தது.
இந்த படகு எல்லைப் படையினரின் கண்காணிப்புக்கு அப்பால் எவ்வாறு சுறுசுறுப்பான கெரால்டன் துறைமுகத்துக்கு வந்தது என்பது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் குறித்த படகை பாதுகாக்க முடியாமையை தொடர்ந்து அதனை நூதனசாலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/81416.html
Geen opmerkingen:
Een reactie posten