தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மனித உரிமைச் சபையில் கரன் பார்கர் அம்மையார்

குழந்தைகளை விற்கும் 24 வயதான யுவதி கைது - மர்மமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஆசிரியை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 06:27.35 AM GMT ]
சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்த இரண்டு குழந்தைகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகளை விற்பனை செய்யும் இந்த நடவடிக்கையுடன் வைத்தியசாலைகளில் பணி புரியும் பெண் சுகாதார ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மர்மமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்ட ஆசிரியை: பசறையில் சம்பவம்
பசறை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியை ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்து பசறை மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றுக்கு எதிரில் புதைத்த சம்பவம் குறித்து பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக ஆசிரியையின் சடலம் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த ஆசிரியை வீடு திரும்பவில்லை என ஆசிரியையின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் ஆசிரியை கொலை செய்யப்பட்டு குறித்த கோயிலுக்கு எதிரில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
சடலத்தை நேற்று தோண்ட பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் உதவியை பெற முடியாத காரணத்தினால் நாளைய தினம் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx0.html
போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மனித உரிமைச் சபையில் கரன் பார்கர் அம்மையார்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 08:52.12 AM GMT ]
போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுப் பிரதிநிதியும், ஐ.நா மனித உரிமைச்சபை வள அறிஞர் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அவர்கள் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபை 27வது கூட்டத் தொடரிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மை, நீதி, ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், தண்டித்தல் மற்றும் மீள நிகழாமல் தடுத்தல் ஆகிய விடயங்களுக்கான ஐநா மனித உரிமைச் சபையின் சிறப்பு ஏற்பாட்டாளர் (Special Rapporteur) DeGreiff அவர்களது அறிக்கை தொடர்பிலான விவாதத்திலேயே இக்கருத்தினை கரன் பார்கர் பதிவு செய்துள்ளார்.
போதிய கல்வி, மனித உரிமைகள் தொடர்பிலான தெளிவு போன்ற பல்வேறு நெறிமுறைகள் பற்றி அறியாதவர்களை, சண்டைக் களங்களுக்கு என திரட்டி, களங்களுக்கு அனுப்பப்படும் கீழ்நிலைச் சிப்பாய்களை தண்டிப்பது என்பதற்கு அப்பால் சென்று, உத்தரவுகளை பிறப்பிக்கின்ற மேல்நிலை உயர்மட்டத்தில் உள்ளவர்கள் தண்டிக்கப்படும் போதுதான் பாரிய மனித உரிமை மீறல்கள் மீளநிகழாமல் தடுக்க முடியும்.
சிங்கள தேசத்தில் ஆட்சி பீடமேறிய ஒவ்வொரு அரசாங்களை தலைதாங்கி நடத்தியவர்கள், ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி யவர்கள் என்ற வகையில்,
சிறிலங்கா அரசின் தற்போதைய தலைவர் மகிந்த ராஐபக்ச, முன்னாள் அரசுத் தலைவர் உட்பட பன்னிருவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, இனப்படுகொலையாளிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையார் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மனித உரிமைச்ச பையில் கரன் பார்கர் அம்மையாரின் இக்கூற்று முக்கியத்துவம் பெறுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx7.html

Geen opmerkingen:

Een reactie posten