தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

வட பகுதி இயல்பு நிலையை அடைந்தாலும் கவலையான விடயங்களும் உள்ளன: பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

வடக்கு பிராந்தியம் கஸ்டமான சூழ்நிலையில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தாலும், அங்கு இன்னும் சில கவலையான விடயங்கள் இருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கு பகுதிக்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
இந்தநிலையில் கொழும்புக்கு திரும்பிய பின்னர், வடபகுதி குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கருத்து வெளியிட்டார்.
வடக்கில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அங்கு இன்னும் சவால்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
வடக்கில் இயல்பு நிலை எற்படுத்தப்படுகின்றது இது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் சில கவலைகள் இன்னும் அங்குள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று வருடங்களின் பின்னர் தாம் முல்லைத்தீவு இந்து தமிழ் வித்தியாலயத்துக்கு சென்றபோது, அங்கு புதிய கட்டடங்களும் திறமையான மாணவர்களும் இருப்பதை கண்டு மகிழ்வுற்றதாக ரங்கீன் கூறியுள்ளார்.
வடக்கில் மக்களின் முன்னேற்றத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு எதிர்காலத்துக்கும் இலங்கையின் நிலையான சமாதானத்துக்கும் வழியேற்படுத்த வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten