வறுமை காரணமாக தமது வாழ்ந்த வீட்டை ஈடுவைத்த குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினரது செயற்பாட்டால் இரண்டு பிள்ளைகள் மற்றும் பெற்றோருடன் நடு வீதிக்கு வரும் நிலை சத்தியராணி என்னும் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் வடமாகாணசபை உறுப்பினரான கனகரத்தினம் விந்தனிடம் ரூபா 6லட்சம் ரூபாவிற்கு ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் மீட்பதாக ஈடுவைத்திருந்தார்.
மீட்பதற்குரிய காலம் தாமதித்தபடியால் தற்போது அவ் வீட்டை மீட்கும் பொருட்டு அவரிடம் நாடிய அந்தப் பெண்ணிடம் 18லட்சம் ரூபா பணத்தை தந்தால் தான் வீட்டை திரும்பத் தருவேன் என்றும் இல்லையேல் இம்மாதம் 5ம் திகதிக்குள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இவரது அச்சுறுத்தலால் அச்சமுற்ற குறித்த பெண் தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றார். அவலக் கண்ணீரோடு ஒட்டுக்குழு தலைவர் அலுவலகம் சென்று தனது நிலையை கூறி வீட்டை மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையால்தான் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
தமிழருக்கு உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் தமிழர்கள் தான் தனது மூச்சு என நிமிடத்திற்கு நிமிடம் கூறிவரும் விந்தனது தேசிய உணர்வு பண மோகத்திலும் பதவி மோகத்திலும் மட்டும் தான் இருக்கின்றது என்பதை இவரது செயற்பாடு எடுத்துக்கட்டுகின்றது.
கடந்த கால யுத்தத்தின் வடுக்களிலிருந்து மீளமுடியாத மக்களாக இருக்கும் தமிழ் மக்களின் சொத்துக்களை மறைமுகமாக கொள்ளையடிக்கும் வேலைகளில் தமிழ்த்தேசிய வாதிகள் எனக் கூறும் பலர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என்று குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/81234.html
Geen opmerkingen:
Een reactie posten