தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

இலங்கையின் மெளனத்தைக் கலைக்க வேண்டும்: நோர்வே பத்திரிகை

இலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை இருக்குமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட வன்செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நோர்வை அரசாங்கம் தற்போது வாய் திறந்திருக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்சவின்  சர்வதேசத்துக்கு எதிரான பிடிவாதத்தை நோர்வே தமது அமைதியின் மூலம் மேலும் வளரவிடக் கூடாது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையை வடகொரியாவுக்கு ஒப்பான நாடு என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx7.html

Geen opmerkingen:

Een reactie posten