தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

அமெரிக்காவின் வேவு விமானம் ஐ.எஸ்.ஐ.எஸ் கைகளில் எவ்வாறு விழ்ந்தது ? அதிர்சி ...

அமெரிக்காவின் அதி நவீன ஸ்பை விமானம் ஒன்றை, ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வைத்திருக்கிறார்கள் என்ற அதிர்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த இந்த ஆளில்லா விமானம் 2 ஏவுகணைகளை தாங்கிச் செல்ல வல்லது. ஆனால் அதில் உள்ள 2 ஏவுகணைகளும் பாவிக்கப்பட்ட நிலையில், அது இல்லாமல் வெறும் கமராவுன் இது உள்ளது. இதனை எவ்வாறு தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு தமது ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்காவும் இதுவரை அறிவிக்கவே இல்லை. இது தொடர்பாக அவர்கள் மூச்சும் காட்டவில்லை. இன் நிலையில் தான் குறித்த தகவல் வெளியாகி உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கைப்பற்றியுள்ள விமானத்தை, தீவிரவாதிகள் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். இதனால் இந்த விமானம் பறப்பில் ஈடுபடும் வேளைகளில் அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் அதனை கொண்டுவர முடியாமல் உள்ளது. அதன் கட்டுப்பாட்டை மாற்றியமைத்து தீவிரவாதிகள் தாம் வேவு பார்க இதனை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. அண்மையில் தீவிரவாதிகள் ஒரு ஏர்-போட்டை கைப்பற்றி இருந்தார்கள். இத்தாக்குதலின் போது அமெரிக்க பாணியில், இதனை மேலே பறக்கவிட்டு அது தரும் துல்லியமான தகவலைப் பெற்று தான் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று மேலும் தெரிய வருகிறது. இதனால் அண்டைய நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
அமெரிக்காவின் தயாரிப்பு விமானமா ? அது ராடர் திரையில் வேறு விளாதே ! அப்படி இருக்க இது எவ்வாறு தீவிரவாதிகள் கைகளில் சேர்ந்தது என்று பல நாடுகள் அச்சமடைந்துள்ளது. இனி இதனை வைத்து என்ன ஆட்டம் எல்லாம் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை. குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகப் போயுள்ளது இந்த விடையம். குதிரை சும்மாவே வேகமாக ஓடும். இதில் கொம்பு முளைத்தால் சொல்லவா வேண்டும் ?
http://www.athirvu.com/newsdetail/913.html

Geen opmerkingen:

Een reactie posten