ஹாங்காங் நாட்டில் இருந்து அன் நாட்டு பொலிசாரின் உதவியோடு பொட்டம்மானை இலங்கைக்கு கொண்டு வர மகிந்த ராஜபக்ஷ முயற்சி எடுத்துள்ளதாக இந்த சிங்கள அடிவருடி இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இவை சிங்கள இணையங்களிலும் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதனால் என்ன நடக்க இருக்கிறது என்று சற்று பார்ப்போம். இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒரு ஜனாதிபதி 3ம் தடவை போட்டியிட முடியாது. 2 தடவைகளே ஜனாதிபதியாக இருக்க முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ஷ 3ம் முறையும் ஜனாதிபதியாக போட்டியிட உள்ளார். ஆனால் சிங்கள மக்களுக்கு இடையே இதற்கு சற்று எதிர்பு கிளமியுள்ளது. விடுதலைப் புலிகளை வென்று அவர் என்ன தான் செல்வாக்கோடு இருந்தாலும், இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை அவர் மீறுவதை பழமையான சிங்கள மக்கள் விரும்பவில்லை.
இதனால் அவர் அப்படி போட்டியிட முடியாது என்று பல சிங்கள கட்சிகளும், பழமையான சிங்கள அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன் நிலையில் சரிந்துபோயுள்ள அவரது செல்வாக்கை கட்டி எழுப்பவும், மகிந்தர் 3 வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏதுவாக இந்தச் செய்தி, சிங்கள புலனாய்வுத்துறையால் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதனை சில தமிழ இணையங்கள் , வெளியிட்டும் உள்ளது. மேலும் சில இணையங்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் இயக்கி வருவதால் அதிலும் இச் செய்தி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/976.html
Geen opmerkingen:
Een reactie posten