தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் புனரமைக்கப்படும்!- கருணா

ஹரினை சந்தித்தமையை ரணில், மஹிந்த பெரிதுபடுத்தவில்லை!- நாமல் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 12:59.49 AM GMT ]
ஊவா மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவை, தாம் சந்தித்தது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது தந்தை மஹிந்த ராஜபக்சவும் எவ்வித பிரச்சினையையும் வெளியிடவில்லை.
இருந்த போதும் ஏனைய தரப்பினர் ஏன் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் மாத்திரம் அல்ல முன்னர் அம்பாந்தோட்டையில் வைத்தும் ஹரினை தாம் சந்தித்தாக அவர் குறிப்பிட்டார்.
தாம் ஹரினை இரகசியமாக சந்திக்க வேண்டுமானால் ஏன்? பதுளைக்கு வரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlx0.html
போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் புனரமைக்கப்படும்!- கருணா
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 12:41.01 AM GMT ]
போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் புனரமைக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோயில்களை புனரமைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வடக்கு கிழக்கில் போர் காரணமாக பகுதியளவில் அல்லது முழு அளவில் சேதமடைந்த 500 கோயில்கள் புனரமைக்கப்பட உள்ளன.
இதற்காக ஜனாதிபதி 500 லட்ச ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 124 கோயில்கள் புனரமைக்கப்பட உள்ளதாக கருணா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஹெட்டிமுனை கருமாரி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUlxz.html

Geen opmerkingen:

Een reactie posten