தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 27வது கூட்­டம் திங்கள் ஆரம்பம்!

சீ.வி.க்கு அரசின் அனுமதி தேவையில்லை! எந்த நாட்டிற்கும் சென்று சந்திப்பில் ஈடுபடலாம்!- அமைச்சர் வாசு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:11.23 AM GMT ]
வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன் இந்­தியா அல்­லது வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வ­தற்கு மத்­திய அர­சின் அனு­ம­தி­பெற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர் இந்­தி­யா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொண்டு அரச தலை­வர்­க­ளுடன் பேச்­சு­ நடத்­து­வ­தற்கு எந்­த­வித தடை­யு­மில்லை என்று அமைச்­ச­ர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். 
வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு மட்­டு­மல்ல அனைத்து மாகாண சபை முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் மாகாண செய­லா­ளர்­க­ளுக்கும் தலை­வர்­க­ளுக்கும் இவ்­வாறு வெளிநா­டு­க­ளுக்குச் சென்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இந்­தியா சென்று பேச்சு நடத்த வேண்­டு­மானால் அர­சாங்­கத்தின் அனு­ம­தியை பெற வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குண­வர்த்­த­னவும் ஆளு­நரின் அனு­மதி பெற­வேண்­டி­யது அவ­சியம் என அமைச்­ச­ர­வை பேச்­சாளர் ஹெக­லிய ரம்­புக்­வ­லவும் கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தனர். இது குறித்து கேட்­ட­போதே அமைச்சர் வாசு­தேவ இவ்­வாறு கூறி­யுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில்;
இந்­தி­யா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொண்டு அந்­நாட்டு அர­சுத் ­த­லை­வர்­க­ளுடன் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு எவ்­வி­த­மான தடையும் இல்லை. இந்­தி­யா­வுக்கு மட்­டு­மல்ல எந்­த­வொரு நாட்­டுக்கும் விஜ­யத்தை மேற்­கொண்டு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தலாம்.
அபி­வி­ருத்­திக்­கான ஒத்­து­ழைப்­புக்­களை கோரு­வ­தற்கும் முடியும். அதற்கு எந்­த­வி­தத்­திலும் தடை­யில்லை. அத்­தோடு மத்­திய அர­சாங்­கத்தின் அனு­ம­தியை கேட்க வேண்­டிய அவ­சி­ய­மு­மில்லை.
வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு மட்­டு­மல்ல அனைத்து மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கும் மாகாண செய­லா­ள­ருக்கும் தலை­வ­ருக்கும் இவ்­வாறு வெளி­நாடு சென்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது. இதற்கு எந்­த­வி­த­மான தடையும் விதிக்­கப்­ப­ட­வில்லை. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பிலும் இதற்கு தடைகள் இல்லை.
ஆனால், வட­மா­கா­ணத்தின் பிரச்­சி­னை­களின் தீர்­வுகள் தொடர்­பாக இந்­திய அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முத­ல­மைச்சர் விரும்­பினால் இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி அரச பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ரையும் தன்­னுடன் கூட்­டிச்­செல்­வதே நன்­மை­ப­யக்கும்.
ஏனென்றால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்கு முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். இப்­பி­ரச்­சி­னை­யோடு இலங்கை, இந்­தியா மற்றும் தமிழ் தரப்­பென மூன்றும் பின்­னிப்­பி­ணைந்­துள்­ளன. இதனை தனித்­த­னி­யாக பிரிக்க முடி­யாது. என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கர.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio4.html
பொன்சேகா சாட்சியமளித்தால் கடும் நடவடிக்கை: அரசு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:17.25 AM GMT ]
ஐ.நா குழுவிற்கு சாட்சியமளிக்க முன்னால் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தயாராகி விட்டதாக அறிகின்றோம், அப்படி அவர் சாட்சியமளித்து நாட்டை காட்டி கொடுக்க எத்தனித்தால் அரசு என்ற ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்க அரசு ஒரு போதும் தயங்காது.
இவ்வாறு ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
 ஐ.நா குழு விசாரணை ஒரு நம்பிக்கையற்ற விசாரணை, அவர்கள் நாட்டிற்குள் வர அனுமதியோம்,  ஐ.நா விசாரணைக்குழு பக்க சார்பானது என்பதால் அரசின் ஆணைப்படி சாட்சியமளிக்கப்பட்டவரை தண்டிக்க எமது அரசு ஆராய்ந்து வருகின்றது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio5.html
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 27வது கூட்­டம் திங்கள் ஆரம்பம்!
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:20.58 AM GMT ]
ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 27வது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் 26 ம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த கூட்டத் தொடரில் மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்த வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
மேலும் இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் தொடர்­பா­கவும் பல நாடு­களின் பூகோள கால மீளாய்வு நிலை­மைகள் குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. விசே­ட­மாக ஈராக்­கிலும் சிரி­யா­விலும் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
இலங்கை விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை குழுவின் ஏற்­பாட்­டாளர் சன்ட்ரா பெய்டா அல்­லது புதிய மனித உரிமை ஆணை­யாளர் இந்த வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் புதிய ஆணை­யாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்­த­வுள்ளார்.
அந்த உரை­யின்­போது இலங்கை விவ­காரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணை­யாளர் பிரஸ்­தா­பிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை இலங்­கையின் சார்பில் இந்தக் கூட்டத் தொடரில் அதி­கா­ரிகள் மட்ட தூதுக்­கு­ழுவே கலந்­து­கொள்­ள­வுள்­ளது. அமைச்­சர்கள் மட்ட தூதுக்­குழு இம்­முறை கலந்­து­கொள்­ள­வில்லை.
அந்த வகையில் ஜெனி­வாவில் உள்ள இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான தூதுக்­குழு 27வது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.
அத்­துடன் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து இரண்டு உயர் அதி­கா­ரிகள் ஜெனி­வா­வுக்­கான தூதுக்­கு­ழுவில் இணைந்­து­  கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­யவே முன்னாள் ஆணை­யாளர் நாயகம் நவ­நீதம்பிள்­ளை­யினால் இந்த விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவில் 12 பேர் உள்­ள­டங்­கு­கின்ற நிலையில் அவர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio6.html

Geen opmerkingen:

Een reactie posten