[ வியாழக்கிழமை, 09 மே 2013, 07:15.33 AM GMT ]
இந்த கொலை தொடர்பான சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டின் ஒன்பது முன்னிலை பாடசாலைகளின் அதிபர்கள் குறித்து ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி, பொல்லுத்தடி, கோடரிப்பிடி, கையுறை, காலுறை, சந்தேக நபர்கள் அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் என்பன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தத் தடயப் பொருட்களில் தோய்ந்திருந்த இரத்தம் மற்றும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் என்பனவற்றைப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டார்.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அன்றிரவு உட்கொண்ட உணவு மாதிரிகள் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்டு அவை முன்னதாக பொழும்புக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் அவர்கள் உட்கொண்ட உணவின் மீதியும் கொழுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது தடயப் பொருட்களும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளும் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு சார்ஜன்ற் எம் நஜிமுதீன் தெரிவித்தார்.
நாடு தழுவிய ஒன்பது பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 07:09.04 AM GMT ]
அமைச்சின் சுற்றறிக்கைகளை கணக்கிலெடுக்காமை, அநாவசிய நிதி கையாள்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறுவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அதிபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அதிபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட எல்பிட்டி பகுதி தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten