தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

செங்கலடியில் கடையொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை


இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 07:18.35 AM GMT ]
மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.
குறித்த தாய் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளார்.
சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான பூஜா ( வயது 7) மற்றும் மூன்றரை வயதான மேனுஜா ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
அவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
செங்கலடியில் கடையொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 07:21.34 AM GMT ]
செங்கலடி – பதுளை வீதியல் கித்துள் வடிச்சல் வீதியில் சில்லைறைக் கடையொன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கடையின் உரிமையாளர், தனது வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்ததும் வழமை போல் கடையை மூடிவிட்டு வடிச்சல் பகுதியிலுள்ள வாடிக்கு படுக்கைக்காக சென்றுள்ளார்.
அதிகாலை வேளையில் கடை தீப்பற்றி எரிவதாக வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் கூறியதும் சென்று பார்த்த போது கடை முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டது என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten