தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை


இலங்கை மீது இலத்திரனியல் போரைத் தொடுக்கிறது அமெரிக்கா!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 07:28.30 AM GMT ]
திருகோணமலையில் இருந்து சிறிலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போரை நடத்தத் திட்டமிடுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் அமெரிக்கத் தூதரகத்தினால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கன் கோணர் தொடர்பாக, ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அவர், திருகோணமலை தந்திரோபாய ரீதியாக முக்கியமான இடம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
"துப்பாக்கிகள், ரவைகள், ஏவுகணைகள், ஆளில்லா உளவு விமானங்கள்போன்ற மரபுரீதியான ஆயுதங்களுக்கு மேலதிகமாக, இலத்திரனியல் போர் முறையிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
இத்தகைய தநடவடிக்கைகள் ஆபத்தில்லாதது போன்ற தோற்றப்பாட்டைக் கொண்ட அமெரிக்கன் கோணர் அல்லது, ஆழ்கடல் கனிம வளங்களை மைப்படுத்திய விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டங்கள் போன்ற தோற்றப்பாட்டைக் கொண்ட இடங்களில் இருந்தே செயற்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டின் எந்தவொரு இடத்திலும், வெளிநாட்டு தூதரகங்கள் தமது செயற்பாட்டுத் தளங்களை அமைக்க இடமளிக்கப்படக் கூடாது.
அவ்வாறு அமைக்கப்படும் தளங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும்." என்றும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 07:06.18 AM GMT ]
தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர். அரசு அவ்வாறு செய்யுமானால் தமிழ் மக்கள் இறுதியாக வைத்துள்ள நம்பிக்கையையும் அது இழக்கும்.
தமிழர்களை அடக்கி ஒடுக்கி தமிழ் மொழியைப் புறக்கணிப்பதில் ஹெல உறுமய, பொதுபலசேனா, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள இனவாதக் கட்சிகளும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ஸ உட்பட சிங்கள இனவாத அரசியல்வாதிகள் சிலரும் மும்முரமாகவுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள், தமிழீழம் கேட்கிறார்கள் என்று கூறி எமது இனத்தை அழிக்க முற்படுகின்றார்.
ஆனால், தமிழ் மக்கள் தனி நாட்டையோ அல்லது தமிழீழத்தையோ கேட்கவில்லை. வடக்கு, கிழக்கில் சகல உரிமைகளுடன் தம்மைத்தாமே ஆளவே அவர்கள் விரும்புகின்றனர்.
எனவே, சந்தேகத்திற்கு இடமளிக்காமல் வடக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் நடத்தவேண்டும் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten